மீண்டும் எகிறும் கொரோனா, 24 மணி நேரத்தில் இவ்வளவு பாதிப்பா?

COVID-19 in India: சமீபத்திய சுகாதார அமைச்சக தரவுகளின்படி, கோவிட் காரணமாக இறந்தவர்களின் எண்ணிக்கை 5,30,824 ஆக உயர்ந்துள்ளது. இதில் தற்போது மகாராஷ்டிராவில் மூன்று மற்றும் கர்நாடகா, ராஜஸ்தான் மற்றும் உத்தராகண்டில் தலா ஒருவர் இறந்துள்ளனர்.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Mar 25, 2023, 11:31 AM IST
  • இந்தியாவின் கோவிட் -19 எண்ணிக்கை 4,47,02,257 ஆக உயர்ந்துள்ளது.
  • இதுவரை 220.65 கோடி டோஸ் கோவிட் எதிர்ப்பு தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளன.
  • மொத்த தொற்று பாதிப்புகள் நான்கு கோடியைத் தாண்டியது.
மீண்டும் எகிறும் கொரோனா, 24 மணி நேரத்தில் இவ்வளவு பாதிப்பா? title=

இந்தியாவில் கொரோனா பாதிப்புகள்: இந்தியாவில் கொரோனா பாதிப்புகள் மீண்டும் வேகமாக அதிகரிக்கத் தொடங்கியுள்ளன. நாட்டில் ஒரு நாளில் 1,590 கோவிட் -19 பாதிப்புகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், இது 146 நாட்களில் அதிகபட்சமாக இருப்பதாகவும் சுகாதார அமைச்சகம் சனிக்கிழமை தெரிவித்துள்ளது. அதேபோல் இதில் செயலில் உள்ள தொற்றுநோய்களின் எண்ணிக்கை 8,601 ஆக அதிகரித்துள்ளது.

காலை 8 மணிக்கு அமைச்சகம் வெளியிட்ட தரவுகளின் படி, வைரஸ் நோயால் இறந்தவர்களின் எண்ணிக்கை மேலும் 6 இறப்புகளுடன் 5,30,824 ஆக உயர்ந்துள்ளது. இதில் மகாராஷ்டிராவில் 3 பேரும், கர்நாடகா, ராஜஸ்தான் மற்றும் உத்தரகாண்டில் தலா ஒருவரும் உயிரிழந்துள்ளனர். அத்துடன் தினசரி பாசிட்டிவ் 1.33 சதவீதமாகவும், வாராந்திர பாசிட்டிவ் 1.23 சதவீதமாகவும் மதிப்பிடப்பட்டது. புதிய பாதிப்புகளுடன், இந்தியாவின் கோவிட் -19 எண்ணிக்கை 4,47,02,257 ஆக உயர்ந்துள்ளது.

மேலும் படிக்க | 7th Pay Commission: அடி தூள்... டிஏ ஹைக்கை தொடர்ந்து ஊழியர்களின் ஊதியத்தில் பம்பர் ஏற்றம், கணக்கீடு இதொ!!

இதனிடையே சுகாதார அமைச்சகத்தின் சமீபத்திய தரவுகளின்படி, நாடு முழுவதும் இதுவரை 220.65 கோடி டோஸ் கோவிட் எதிர்ப்பு தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளன.

இந்தியாவில் இப்படித்தான் கொரோனா பரவியது
உண்மையில், ஆகஸ்ட் 7, 2020 அன்று, இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 20 லட்சத்தையும், ஆகஸ்ட் 23, 2020 அன்று 30 லட்சத்தையும், செப்டம்பர் 5, 2020 அன்று 40 லட்சத்தையும் தாண்டியது. 16 செப்டம்பர் 2020 அன்று மொத்த நோய்த்தொற்று பாதிப்புகள் 50 லட்சத்தையும், 28 செப்டம்பர் 2020 அன்று 60 லட்சத்தையும், 11 அக்டோபர் 2020 இல் 70 லட்சத்தையும், 29 அக்டோபர் 2020 அன்று 80 லட்சத்தையும், நவம்பர் 20 அன்று 90 லட்சத்தையும் தாண்டியது. 

அதேபோல் 19 டிசம்பர் 2020 அன்று, இந்த பாதிப்புகள் நாட்டில் ஒரு கோடியைத் தாண்டிவிட்டன. மே 4, 2021 அன்று, பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இரண்டு கோடியைத் தாண்டியது, ஜூன் 23, 2021 அன்று அது மூன்று கோடியைத் தாண்டியது. கடந்த ஆண்டு, ஜனவரி 25 அன்று, மொத்த தொற்று பாதிப்புகள் நான்கு கோடியைத் தாண்டியது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க | நாட்டுக்காக போரடினால் சிறையா? ஏற்கத் தயார்: சூளுரைக்கும் ராகுல் காந்தி

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News