உத்தரகாசியில் மீட்ப்பு பணியில் ஈடுபட்ட ஹெலிகாப்டர் விபத்து..

மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்ட ஹெலிகாப்டர் உத்தரகண்ட் மாநிலத்தின் உத்தரகாஷியில் விபத்துக்குள்ளானது!!

Last Updated : Aug 21, 2019, 01:15 PM IST
உத்தரகாசியில் மீட்ப்பு பணியில் ஈடுபட்ட ஹெலிகாப்டர் விபத்து.. title=

மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்ட ஹெலிகாப்டர் உத்தரகண்ட் மாநிலத்தின் உத்தரகாஷியில் விபத்துக்குள்ளானது!!

உத்தரகண்ட் மாநிலம், உத்தரகாசி மாவட்டத்தில் வெள்ளம் பாதித்த பகுதிகளை அந்த மாநில முதல்வர் திரிவேந்திர சிங் ராவத் செவ்வாய்க்கிழமை பார்வையிட்டார். வெள்ளத்தில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்குத் தலா ரூ. 4 லட்சம் இழப்பீடு வழங்கவும் அவர் உத்தரவிட்டுள்ளார்.

உத்தரகாசி மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை முதல் தொடர்ந்து கனமழை பெய்ததால், மாவட்டம் முழுவதும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளது. வீடுகள் இடிந்து விழுந்தது, நிலச்சரிவு, வெள்ளம் உள்பட பல்வேறு காரணங்களால் இதுவரை 16 பேர் உயிரிழந்தனர். வெள்ளத்தால் பாதிப்படைந்த பகுதிகளை அந்தந்த தொகுதி எம்.பி., எம்எல்ஏக்கள் திங்கள்கிழமை பார்வையிட்டனர்.

அதைத் தொடர்ந்து வெள்ள பாதிப்புகளை முதல்வர் திரிவேந்திர சிங் ராவத் செவ்வாய்க்கிழமை ஹெலிகாப்டர் மூலம் பார்வையிட்டார். ஆராகோட் பகுதி மக்களை நேரில் சந்தித்த ராவத், அரசிடம் இருந்து தேவையான உதவிகள் அளிக்கப்படும் என்று வாக்குறுதி அளித்தார். அதன் பின்னர், மழை தொடர்பான இடர்களால் உயிரிழந்த 16 பேரின் குடும்பங்களுக்கு இழப்பீடாக தலா ரூ. 4 லட்சம் வழங்கப்படும் என்று அறிவித்தார். மேலும், வெள்ள பாதிப்பு உள்ள பகுதிகளில் சீரமைப்புப் பணிகளை விரைந்து மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

இந்நிலையில், உத்தரகண்ட் மாநிலத்தின் உத்தரகாஷியில் மீட்பு பணியில் ஈடுபட்ட ஹெலிகாப்டர் இன்று விபத்துக்குள்ளானது. ஹெலிகாப்டர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதியில் சிக்கித் தவிக்கும் மக்களுக்கு நிவாரணப் பொருட்களை எடுத்துச் சென்றுள்ளது. அப்போது அது பாதிக்கப்பட்ட இடத்தை நெருங்கியதும் செயலிழந்து விபத்துக்குள்ளானது, சப்பரில் மூன்று பேர் இருந்தனர். உத்தரகாஷிக்கு அருகிலுள்ள மோரி கிராமத்தில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. ஹெலிகாப்டரில் வந்த மூன்று பேரில் இருவர் இறந்துள்ளனர் மற்றும் ஒருவர் பலத்த காயமடைந்துள்ளார்.

 

Trending News