காஷ்மீரில் நடைபெற்ற ஆப்ரேசனில் 5 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை

காஷ்மீரின் பட்கம் மற்றும் சோபோர் பகுதியில் நடைபெற்ற என்கவுண்டரில் 5 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.

Last Updated : Nov 30, 2017, 05:00 PM IST
காஷ்மீரில் நடைபெற்ற ஆப்ரேசனில் 5 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை title=

காஷ்மீரின் பட்கம் மற்றும் சோபோர் பகுதியில் நடைபெற்ற என்கவுண்டரில் 5 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.

காஷ்மீரின் பட்கம் பகுதியில் தீவிரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக பாதுகாப்பு படைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து, அந்த பகுதிக்கு சென்ற பாதுகாப்பு படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். திடிரென தீவிரவாதிகள் பாதுகாப்பு படையினர் மீது துப்பாக்கி சூடு நடத்தினர். இதற்கு பதிலுடி கொடுக்கும் விதமாக பாதுகாப்பு படையினரும் தீவிரவாதிகள் குறி வைத்து தாக்குதல் கொடுத்தனர். இருதரப்பினர் இடையே நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் நான்கு தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர் என இந்திய ராணுவம் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. 

இந்த சண்டையில் இந்திய பாதுகாப்பு படையை சேர்ந்த வீரர் ஒருவருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. இதேபோல காஷ்மீரின் சோபோர் பகுதியில் நடைபெற்ற சண்டையில் ஒரு பயங்கரவாதியை சுட்டுக் கொல்லப்பட்டான் என இந்திய ராணுவம் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

 

Trending News