அரசு ஊழியர், ஓய்வூதியதாரர்களுக்கு அடித்த ஜாக்பார்ட்... அகவிலைப்படி 4% அதிகரிப்பு

மத்திய அரசின் ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான அகவிலைப்படி 4% அதிகரிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்!!

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Mar 13, 2020, 05:55 PM IST
அரசு ஊழியர்,  ஓய்வூதியதாரர்களுக்கு அடித்த ஜாக்பார்ட்... அகவிலைப்படி 4% அதிகரிப்பு title=

டெல்லி: மத்திய அரசின் ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான அகவிலைப்படி 4% அதிகரிக்க மத்திய அமைச்சரவை வெள்ளிக்கிழமை (மார்ச்-13) ஒப்புதல் அளித்தது. அகவிலைப்படி உயர்வு என்பது பணவீக்கம் மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரிப்பு ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டது. 

4 சதவீத உயர்வு என்றால், மத்திய அரசு ஊழியர்களின் மாத சம்பளம் ரூ .720 அதிகரித்து ரூ .10,000 ஆக உயரும். மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியம் பெறுவோருக்கு 2020 ஜனவரி 1 முதல் அகவிலைப்படி  உயர்வு அடிப்படையில் வழங்கப்பட வேண்டும் என்று மத்திய அரசு முன்பு கூறியிருந்தது.

மத்திய அரசு எடுத்த இந்த முடிவு 48 லட்சம் அரசு ஊழியர்களுக்கும் 65 லட்சம் ஓய்வூதியதாரர்களுக்கும் பயனளிக்கும் என்று மத்திய அமைச்சர் ஜவடேகர் தெரிவித்தார். அவர் கூறிய முக்கிய அம்சங்கள்...!!

* இது 1.13 கோடி குடும்பங்களுக்கு பயனளிக்கும் என்று அவர் கூறினார்.

* அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் சம்பளத்தின் ஒரு அங்கமான அகவிலைப்படி உயர்வு அரசுக்கு ரூ .14,595 கோடி செலவாகும் என்றும் அவர் கூறினார்.

* இந்த ஆண்டு ஜனவரி 1 முதல் பணம் செலுத்தப்படும்.

* ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 1 மற்றும் ஜூலை 1 முதல் மத்திய அரசின் பணியாளர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் நலன்கருதி, பொதுவாக மார்ச் மற்றும் செப்டம்பர் மாதங்களில் ஊதியம் வழங்கப்படுகிறது.

* பணவீக்கம் மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலைகள் ஆகியவற்றின் அடிப்படையில் டிஏ (Dearness Allowance) கணக்கிடப்படுகிறது. டி.ஏ.யைக் கணக்கிடுவதற்காக தொழில்துறை தொழிலாளர்களுக்கான அகில இந்திய நுகர்வோர் விலைக் குறியீட்டை அரசாங்கம் கணக்கில் எடுத்துக்கொள்கிறது.

* டிஏ முழுமையாக வரி விதிக்கப்படக்கூடியது மற்றும் பணியாளரின் அலுவலகம் அமைந்துள்ள நகரத்தின் அடிப்படையில் தீர்மானிக்கப்படுகிறது. எனவே, நகர்ப்புறத்தில் உள்ள ஊழியர்களுக்கு டி.ஏ சற்று அதிகமாகவும் மற்றும் நடுத்தர நகர்ப்புற பகுதிகள் மற்றும் கிராமங்களில் வசிப்பவர்களுக்கு குறைவாகவும் இருக்கும். 

* ​​2016 ஜனவரியில் ஏழாவது ஊதியக்குழுவை மத்திய அரசு செயல்படுத்தியது. அப்பொழுது சம்பள உயர்வு அதிகரித்தது குறிப்பிடத்தக்கது.

Trending News