சிபிஎஸ்இ 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு கட்டாயமாகிறது

2018-ம் ஆண்டு முதல் சி.பி.எஸ்.இ. 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு கட்டாயமாகிறது என  சி.பி.எஸ்.இ. நிர்வாகக்குழு தெரிவித்துள்ளது.

Last Updated : Dec 21, 2016, 10:06 AM IST
சிபிஎஸ்இ 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு கட்டாயமாகிறது title=

புதுடெல்லி: 2018-ம் ஆண்டு முதல் சி.பி.எஸ்.இ. 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு கட்டாயமாகிறது என  சி.பி.எஸ்.இ. நிர்வாகக்குழு தெரிவித்துள்ளது.

சி.பி.எஸ்.இ பாடத் திட்டத்தில் பயிலும் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு கடந்த 2010-ம் ஆண்டு வரை பொதுதேர்வு நடைப்பெற்றது. ஆனால் பல்வேறு காரணங்களுக்கு இந்த பொது தேர்வு நடைமுறை 2010-ம் ஆண்டோடு கைவிடப்பட்டது. இதனால் சி.பி.எஸ்.இ பாடத் திட்டத்தில் படிக்கும் மாணவர்கள் நேரடியாக 12-ம் வகுப்பில் பொது தேர்வை ஏதிர்கொள்வதால் அவர்களுக்கு பல்வேறு சிரமங்கள் ஏற்படுவதாக கல்வியாளர்கள் கருத்தை முன் வைத்தனர்.

சி.பி.எஸ்.இ., பள்ளிகளில் தற்போது உள்ள நடைமுறைப்படி, சி.பி.எஸ்.இ., பத்தாம் வகுப்பு மாணவர்கள் விரும்பினால் பொதுத் தேர்வு எழுதலாம் அல்லது பள்ளியில் நடத்தப்படும் தேர்வை எழுதலாம். இந்நிலையில் சி.பி.எஸ்.இ., பாடதிட்டத்தில் பத்தாம் வகுப்பு படிக்கும் அனைத்து மாணவர்களுக்கும் பொதுத்தேர்வை கட்டாயமாக்க வேண்டும் என சி.பி.எஸ்.இ நிர்வாகக் குழு பரிந்துரைத்துள்ளது. இப்பரிந்துரையை மத்திய அரசு ஏற்றுக்கொண்டால் வரும் 2018-ம் ஆண்டு முதல் சி.பி.எஸ்.இ., மாணவர்களுக்கு பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு கட்டாயமாக்கப்படும். 

இதனால் அடுத்த ஆண்டு முதல் சி.பி.எஸ்.இ பத்தாம் வகுப்புக்கு பொது தேர்வு நடத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. பத்தாம் வகுப்புக்கு 2018-ம் ஆண்டு முதல் பொது தேர்வு கட்டாயம் நடத்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளனர்.

தற்போது 6-ம் முதல் 8-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு மூன்று மொழிகள் அதாவது இந்தி, ஆங்கிலம் மற்றும் நவீன இந்திய மொழி பயிற்றுவிக்கும் முறை உள்ளது. இதனை ஒன்பதாம் மற்றும் பத்தாம் வகுப்பு வரை நீட்டிக்கப்படவேண்டும் என்றும் குழு பரிந்துரைத்துள்ளது. 

மேலும் இந்தி, ஆங்கிலம், மற்றும் ஒரு இந்திய மொழியும் கற்பிக்கப்படவேண்டும் என்றும் வெளிநாட்டு மொழிகள் 4-வது மொழியாக விருப்பப் பாடமாக சேர்க்கப்படலாம் என்றும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இந்த பரிந்துரைகள் குறித்த இறுதி முடிவை மத்திய அரசு எடுக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதனால் அடுத்த ஆண்டு முதல் சி.பி.எஸ்.இ பத்தாம் வகுப்புக்கு பொது தேர்வு நடத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

Trending News