பாவம் செய்பவருக்கு தான் கேன்சர் வரும்: அசாம் அமைச்சர்!!

ஒருவர் செய்த பாவங்களை பொறுத்தே கேன்சர் வரும் என அசாம் மாநில பாஜக கட்சியின் சுகாதாரத்துறை அமைச்சர் ஹிமன்ட பிஸ்வா சர்மா பேசியுள்ளார். 

Last Updated : Nov 23, 2017, 09:01 AM IST
பாவம் செய்பவருக்கு தான் கேன்சர் வரும்: அசாம் அமைச்சர்!! title=

ஒருவர் செய்த பாவங்களை பொறுத்தே கேன்சர் வரும் என அசாம் மாநில பாஜக கட்சியின் சுகாதாரத்துறை அமைச்சர் ஹிமன்ட பிஸ்வா சர்மா பேசியுள்ளார். 

அசாம் மாநில கவுகாத்தியில் நிகழ்ச்சி ஒன்றில் பள்ளி ஆசிரியர்களுடன் பங்கேற்ற பொழுது பேசிய அவர், கடவுள் நாம் செய்த பாவங்களுக்காக நம்மை தண்டிப்பார். நாம் இளைஞர்களுக்கு கேன்சர் வருவதையும், பார்த்திருக்கிறோம். நீங்கள் அவர்களிடம் கடந்த காலத்தை பார்த்தால் அவர் செய்த பாவத்திற்கான தண்டனையாகவே அது அமைந்திருக்கும் வேறு ஒன்றும் இல்லை. நாம் செய்த பாவங்களுக்கான தண்டனையை நாம் பெற்றே ஆக வேண்டும். '' என கூறினார். 

Trending News