அகல் தஹாத் விரைவு ரயிலில் வெடிகுண்டு கண்டெடுப்பு

Last Updated : Aug 10, 2017, 10:47 AM IST
அகல் தஹாத் விரைவு ரயிலில் வெடிகுண்டு கண்டெடுப்பு title=

பஞ்சாப் மாநில அமிர்தசரஸில் இருந்து மேற்கு வங்காளம் செல்லும் அகல் தஹாத் விரைவு ரயில் நேற்று நள்ளிரவு உத்தரபிரதேசம் மாநிலம் அமேதி அருகே சென்று கொண்டிருந்த போது கழிவறையில் டிபன் பாக்ஸ் வடிவிலான மர்மப்பொருள் வைக்கப்பட்டு இருந்தது.

இதனையடுத்து, பயணிகளின் தகவலையடுத்து ரயில் பாதி வழியில் நிறுத்தப்பட்டு, வெடிகுண்டு இருந்த இரண்டு பெட்டிகள் தனியாக கழற்றி விடப்பட்ட பின்னர், ரயில் புறப்பட்டுச் சென்றது.

வெடிகுண்டுகளை பரிசோதித்த நிபுணர்கள் அதை செயலிழக்கச் செய்தனர். வெடிகுண்டு உடன் ஒரு கடிதமும் போலீசாரிடம் சிக்கியுள்ளது.

அந்தக்கடிதத்தில் காஷ்மீரில் பாதுகாப்பு படையினரால் தீவிரவாதி அபுவானி கொல்லப்பட்டதற்கு பழிவாங்க வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக எழுதப்படிருந்தது. இது தொடர்பாக அம்மாநில போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Trending News