பாரமுல்லா தாக்குதல்: பிரதமர் மோடி - அஜித் தோவல் ஆலோசனை

Last Updated : Oct 3, 2016, 01:35 PM IST
பாரமுல்லா தாக்குதல்: பிரதமர் மோடி - அஜித் தோவல் ஆலோசனை  title=

எல்லையில் உள்ள  பாரமுல்லாவில் இந்திய நிலைகள் மீது பாகிஸ்தான் ராணுவமு தாக்குதல் நடத்தியது.

இந்தியா பாகிஸ்தான் எல்லையில் பதற்றம் நிலவி வரும், இந்நிலையில், நேற்று இரவு பாரமுல்லாவில் இந்திய நிலைகள் மீது பாகிஸ்தான் ராணுவமும், பயங்கரவாதிகளும் தாக்குதல் நடத்தினர்.

இதில் இரண்டு பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். இந்திய வீரர் ஒருவர் வீரமரணம் அடைந்தார். இதனை தொடர்ந்து, பூஞ்ச் அருகே ஷாபூர் பகுதியில் எல்லைக்கட்டுப்பாட்டு கோடு பகுதியில் 

பாகிஸ்தான் ராணுவத்தினர் அத்துமீறி தாக்குதல் நடத்தினர். எல்லையில் இந்திய நிலைகள் மீது தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள் மீது இந்திய ராணுவத்தினர் தக்க பதிலடி கொடுத்துள்ளது. 

மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் காஷ்மீர் செல்ல உள்ள நிலையில் இந்த தாக்குதல் நடந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் பிரதமர் மோடி அவர்கள் இந்த தாக்குதலை குறித்து தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலிடம் ஆலோசித்து வருகிறார்.

Trending News