கட்டு கட்டாக 2 ஆயிரம் ரூபாய் கள்ளநோட்டு: 3 பேர் கைது

மேற்கு வங்கத்தில் 2 ஆயிரம் ரூபாய் கள்ளநோட்டு வைத்திருந்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

Last Updated : Nov 18, 2017, 03:44 PM IST
கட்டு கட்டாக 2 ஆயிரம் ரூபாய் கள்ளநோட்டு: 3 பேர் கைது title=

மேற்கு வாங்களத்தில் அதிக அளவிலான கள்ளநோட்டுக்கள் பழக்கத்தில் இருப்பதாகவும், முர்ஷிதாபாத் நகரில் கள்ளநோட்டுகள் அதிக அளவில் உபயோகிப்பதாகவும் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, அவற்றை கண்டுபிடிக்க போலீசார் நடவடிக்கை எடுத்தனர். 

அப்பகுதியில் சோதனையிட்ட  போலீசார், இரண்டாயிரம் ரூபாய் கள்ளநோட்டு வைத்திருந்த 3 நபர்களை கைது செய்தனர். அவர்களிடமிருந்து, 5,96,000 ரூபாய் கள்ளநோட்டுகளை பறிமுதல் செய்தனர். 

இது போன்று டெல்லியில் நேற்று கள்ளநோட்டுகளை உபயோகித்து வந்த ஒரு நபரை  போலீசார் கைது செய்தனர். அவர் வைத்திருந்த 6,60,000 ரூபாய் கள்ளநோட்டுகளை பறிமுதல் செய்தனர்.

 

;

 

Trending News