கோடைக்கு இதம் தரும் கரும்பு ஜூஸ்...ஆனா இவர்கள் குடிக்கவே கூடாது

Side effects of sugarcane juice: கரும்புச் சாற்றில் அத்தியாவசிய வைட்டமின்கள் மற்றும் இரும்பு, கால்சியம் மற்றும் மெக்னீசியம் போன்ற தாதுக்கள் நிறைந்துள்ளன, இவை நல்ல ஆரோக்கியத்தை பராமரிக்க தேவையானவை.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Apr 17, 2023, 09:12 AM IST
  • சிலர் இந்த ஜூஸை குடிக்கவே கூடாது.
  • கரும்புச்சாறு ஒரு புத்துணர்ச்சியூட்டும் பானமாகும்.
  • இது ஒரு சிறந்த ஆற்றல் மூலமாகும்.
கோடைக்கு இதம் தரும் கரும்பு ஜூஸ்...ஆனா இவர்கள் குடிக்கவே கூடாது title=

கரும்புச் சாற்றின் பக்க விளைவுகள்: கரும்புச்சாறு ஒரு சுவையான மற்றும் புத்துணர்ச்சியூட்டும் பானமாகும், இது இந்தியாவின் பல மாநிலங்களில், குறிப்பாக கோடை காலத்தில் பிரபலம். ஒரு சுவையான பானம் தவிர, இது பல ஆரோக்கிய நன்மைகளையும் வழங்குகிறது. கரும்புச் சாற்றில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன, இது உடலின் செல்களை சேதப்படுத்தும் ஃப்ரீ ரேடிக்கல்களை எதிர்த்துப் போராட உதவுகிறது. அத்துடன் இதில் விரைவான ஆற்றலை வழங்கும் இயற்கை சர்க்கரைகள் இருப்பதால் இது ஒரு சிறந்த ஆற்றல் மூலமாகும். இதுமட்டுமின்றி, கரும்புச் சாற்றில் அத்தியாவசிய வைட்டமின்கள் மற்றும் தாதுக்களான இரும்பு, கால்சியம் மற்றும் மெக்னீசியம் ஆகியவை நிறைந்துள்ளன, அவை நல்ல ஆரோக்கியத்தை பராமரிக்க அவசியமானவை. இந்த ஊட்டச்சத்துக்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், எலும்பு வலிமையை மேம்படுத்தவும், ஆரோக்கியமான செரிமானத்தை ஊக்குவிக்கவும் உதவுகின்றன.

இந்த நிலையில் கரும்புச்சாறு ஆரோக்கியமான பானமாக இருந்தாலும், சிலர் இந்த ஜூஸை குடிக்கவே கூடாது. ஏனெனில் அது அவர்களின் உடல்நலத்தை பாதிக்கலாம். எனவே எந்தெந்த நபர்கள் கரும்புச்சாறு அருந்தக்கூடாது என்பதை தெரிந்து கொள்வோம்.

மேலும் படிக்க | கோடையில் சாப்பிட வேண்டிய முழாம்பலத்தின் அற்புத நன்மைகள்..!

நீரிழிவு நோய்
கரும்புச்சாற்றில் இயற்கையான சர்க்கரை அதிகமாக இருப்பதால், ரத்தத்தில் சர்க்கரையின் அளவு திடீரென அதிகரிக்கும். அதனால்தான் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கரும்புச்சாறு தீங்கு விளைவிக்கும் என்பார்கள்.

சிறுநீரக பிரச்சினைகள்
கரும்பு சாற்றில் அதிக அளவு பொட்டாசியம் உள்ளது, இது சிறுநீரக பிரச்சனை உள்ளவர்களுக்கு ஆபத்தானது.

கல்லீரல் நோய்
கரும்புச்சாறு குடிப்பது கல்லீரலில் அழுத்தத்தை ஏற்படுத்தும், இது கல்லீரல் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தீங்கு விளைவிக்கும்.

தலைவலி
தலைவலி பிரச்சனையுடன் போராடுபவர்கள், கரும்பு சாறு குடித்தால் மேலும் பிரச்சனையை தூண்டும். உங்களுக்கு  அடிக்கடி தலைவலி பிரச்சனை இருந்தால், கரும்பு சாறு குடிப்பதை தவிர்க்கவும். இதனால் தலைசுற்றல், தலைவலி போன்ற பல பிரச்சனைகள் வரலாம்.

குளிர் காய்ச்சல்
சளி, காய்ச்சல் வந்தால் கரும்புச்சாறு அருந்தக் கூடாது. இது தவிர கரும்புச்சாறு புண், இருமல் போன்ற பிரச்சனைகளை உண்டாக்கும்.

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன்னர் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | காபி இல்லாமல் இருக்கவே முடியலையா... உங்களுக்கு ஒரு கெட்ட நியூஸ்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News