கண்களைச் சுற்றி இருக்கும் கருப்பு வளையம் மறைய எளிய வழிகள்

Last Updated : May 3, 2017, 05:38 PM IST
கண்களைச் சுற்றி இருக்கும் கருப்பு வளையம் மறைய எளிய வழிகள் title=

கண்களைச் சுற்றி கருப்பு வளையம் சில பெண்களுக்கு இருக்கும். இது பெண்களை வயதானவர் போல் காட்டும். 

சரியான தூக்கம் இல்லாமல் போனாலும் கண்களில் கரு வளையம் தோன்றும். தினமும் குறைந்தது எட்டு மணி நேரமாவது தூங்க வேண்டும்.

இதை போக்க சில எளிய வழிகள் பார்ப்போம் :-

வெள்ளரிக்காய், உருளைக்கிழங்கு இரண்டையும் சம அளவு எடுத்து அதை நன்றாக அரைத்துக் கொள்ளவும்.

> ஒரு மெல்லிய வெள்ளை துணியை பன்னீரில் நனைத்து கண்களின் மீது வைத்து, அதன் மேல் அரைத்த கலவையை வைக்க வேண்டும். அப்படியே அரை மணி நேரம் இருக்க வேண்டும். இவ்வாறு வாரத்தில் 5 நாட்கள் செய்தாலே போதுமானது. கருவளையம் இருந்த இடம் தெரியாமல் போய்விடும். 

> வெள்ளரிக்காய்ச்சாறை முகத்தில் தேய்த்து, ஒரு மணி நேரத்திற்கு பின் கழுவி விட வேண்டும். தொடர்ந்து இதுபோல் செய்து வந்தால், கரு வளையம் படிப்படியாக மறைய ஆரம்பித்து விடும்.

இப்படி செய்து வந்தால் கருப்பு வளையம் நீங்கி கண்கள் அழகாகவும், முகம் பார்க்க கவர்ச்சியாகவும் இருக்கும்.

Trending News