அதிர்ச்சி! கவுதமாலா எரிமலை வெடிப்பு: பலி எண்ணிக்கை 109-யை எட்டியது!

கவுதமாலா நாட்டில் உள்ள பியூகோ எரிமலை தீடிரென வெடித்ததில் தற்போதைய நிலவரப்படி 109-பேர் பலியாகி உள்ளனர்!  

Last Updated : Jun 8, 2018, 09:35 AM IST
அதிர்ச்சி! கவுதமாலா எரிமலை வெடிப்பு: பலி எண்ணிக்கை 109-யை எட்டியது! title=

கவுதமாலாவில் நாட்டில் பியூகோ எரிமலை திடீரென வெடித்ததில் மொத்தம் இதுவரை 109 பேர் பலியாகி உள்ளனர். நேற்று மாலை வரை மொத்தம்  69 பேர்தான் பலியாகி இருந்தனர். ஆனால் தற்போதைய நிலவரப்படி பலி எண்ணிக்கை 109-ஆக உயர்ந்துள்ளது. 

கவுதமாலா நாட்டில் பியூகோ எரிமலை தலைநகர் கவுதமாலா சிட்டிக்கு அருகே அமைந்துள்ளது. கடந்த ஞாயிற்று கிழமை இந்த எரிமலை திடீரென்று வெடித்து சிதறியது. இதில் இருந்து 700 டிகிர் செல்சியஸிற்கும் கூடுதலான வெப்பம் கொண்ட ‘லாவா’ வெளியேறியதுடன் கரும்புகை மற்றும் சாம்பலானது தலைநகர் உள்பட பிற பகுதிகளுக்கு பரவின.

எரிமலையில் இருந்து 10 கி.மீட்டர் உயரத்துக்கும் மேல் சாம்பல் புகை வெளியேறியது. முதலில் 8 கிலோ மீட்டர் பகுதியை ஆக்கிரமித்த இந்த எரிமலை குழம்புகள் இப்போது பன்னிரண்டு கிலோ மீட்டர் தூரம் வரை ஆக்கிரமித்துள்ளது. தொடர்ந்து எரிமலை குழம்புகள் மக்கள் இருக்கும் பகுதியை நோக்கி நகர்ந்து கொண்டு இருக்கிறது. மக்கள் மாட்டிய மக்கள் இந்த மோசமான இயற்கை பேரழிவு காரணமாக இதுவரை 300 பேர் காயமடைந்துள்ளனர். 2000 பேர் ஊரை காலி செய்துள்ளனர். 1000 பேர் காணாமல் போய் இருக்கிறார்கள். 

அவர்களை தேடும் பணியில் எச்சரிக்கையுடன் மீட்பு பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். காணாமல் போனவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. மேலும், கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத வகையில் மிக பெரிய அளவில் இந்த எரிமலை வெடிப்பு நிகழ்ந்துள்ளது குறிபிடத்தக்கது.

இந்நிலையில் எரிமலை வெடிப்பில் 109 பேர் பலியாகி இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக கவுதமாலா அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Trending News