இந்திய ரூபாய் நோட்டில் போட்டோவை அச்சிடுவதில் RBI - அரசாங்கத்தின் பங்கு என்ன?

இந்திய நாணயத்தின் வடிவமைப்பு அல்லது புதிய வடிவமைப்பின் முடிவு இந்திய ரிசர்வ் வங்கியால் எடுக்கப்படுகிறது.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Oct 28, 2022, 01:28 PM IST
  • இந்திய கரன்சி நோட்டுகள்
  • இந்திய நாணயத்தின் வடிவமைப்பு
  • இந்திய வங்கி நோட்டுகளில் லட்சுமி கணேஷ்
இந்திய ரூபாய் நோட்டில் போட்டோவை அச்சிடுவதில் RBI - அரசாங்கத்தின் பங்கு என்ன? title=

ஆம் ஆத்மி கட்சி சமீபத்தில் இந்திய ரூபா நோட்டில் லட்சுமி-கணேஷ் படம் அச்சிடப்பட வேண்டும் என்ற கோரிக்கையை எழுப்பி இருந்தார். கரன்சி நோட்டுகளில் லட்சுமி தேவி மற்றும் கணேஷின் படத்தை அச்சடித்தால் நாட்டில் செழிப்பு ஏற்படும் என ஆம் ஆத்மி கட்சி தெரிவித்து இருந்தது. இந்நிலையில், இந்தக் கோரிக்கையை பாரதிய ஜனதா உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்துள்ளன. மேலும் சட்டமன்றத் தேர்தலைக் கருத்தில் கொண்டு ஆம் ஆத்மி கட்சி “மதக் கோரிக்கையை” எழுப்புகிறது என்று எதிர்க்கட்சிகள் கூறி வருகின்றனர். 

இந்த நிலையில் இன்று நாங்கள் இந்திய ரூபாய் நோட்டுகளில் என்ன அச்சிடப்பட வேண்டும், என்ன அச்சிடப்படக் கூடாது, மேலும் யார் இது தொடர்பான முடிவை எடுப்பார் என்பதை விரிவாக தெரிவிக்கப் போகிறோம்.

இந்திய நாணயத்தின் வடிவமைப்பு அல்லது புதிய வடிவமைப்பின் முடிவு இந்திய ரிசர்வ் வங்கியால் எடுக்கப்படுகிறது. இதில் ரிசர்வ் வங்கியின் மத்திய வாரியத்துடன், அரசுக்கும் பிரதிநிதித்துவம் உண்டு. ஆனால் நாணயங்களில் ஏதேனும் மாற்றங்கள் செய்யப்பட வேண்டும் அல்லது வடிவமைப்புகள் செய்யப்பட வேண்டும் என்றால், முழு முடிவும் அரசாங்கத்தின் கையிலேயே உள்ளது.

மேலும் படிக்க | அரசு ஊழியர்களுக்கு எச்சரிக்கை! கிராஜூட்டி, ஓய்வூதியம் பறிக்கப்படலாம்!

நாணயங்களுக்கான சட்டம் என்ன?
ரிசர்வ் வங்கியின் பட்டியலில் உள்ள நாணயங்கள் குறைவாகவே உள்ளன. ரிசர்வ் வங்கி நாணயங்களை மட்டுமே விநியோகிக்க முடியும், மீதமுள்ள பணிகள் அதன் அதிகார வரம்பிற்குள் வராது. எந்தவொரு நாணயத்தையும் வடிவமைப்பது அல்லது அதை அச்சிடுவது அரசாங்கத்தின் உரிமையாகும். இதற்காக, நாணயச் சட்டம், 2011ன் கீழ் அரசு அதிகாரம் பெற்றுள்ளது.

இந்த நோட்டுகளில் காந்தியின் படம் உள்ளது
1996 முதல், அனைத்து ரூபாய் நோட்டுகளிலும் அசோக தூணுக்கு பதிலாக மகாத்மா காந்தியின் உருவப்படம் அச்சடிக்கப்பட்டது. அசோக தூண் படம் வாட்டர்மார்க் சாளரத்திற்கு அடுத்ததாக இடது பக்கம் நகர்த்தப்பட்டுள்ளது. மகாத்மா காந்தி 2005 தொடரில் ரூ.10, ரூ.20, ரூ.50, ரூ.100, ரூ.500 மற்றும் ரூ.1,000 நோட்டுகள் வெளியிடப்பட்டுள்ளன. 1996 சீரிஸின் நோட்டுகளில் அவை சில கூடுதல் அம்சங்களைக் கொண்டுள்ளன. இந்த புதிய நோட்டுகள் இந்தியாவின் கலாச்சார பாரம்பரியம் மற்றும் அறிவியல் சாதனைகளை எடுத்துக்காட்டுகின்றன.

மேலும் படிக்க | ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு தீபாவளி பரிசு, அரசு தொடங்கிய சிறப்பு திட்டம் 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News