EPFO: பிஎப் வட்டி வகிதம் மாற்றம்; 7 கோடி பேர் தெரிந்து கொள்ள வேண்டிய ஜாக்பாட்

EPFO Interest: உங்கள் தொகையில் பிடித்தம் செய்யப்பட்ட பிஎப் தொகைக்கு கொடுக்கப்படும் வட்டி மற்றும் எப்போது கொடுக்கப்படும் என்பது உள்ளிட்ட தகவல்களை இங்கே தெரிந்து கொள்ளலாம். 

Written by - S.Karthikeyan | Last Updated : Sep 4, 2022, 06:40 PM IST
EPFO: பிஎப் வட்டி வகிதம் மாற்றம்; 7 கோடி பேர் தெரிந்து கொள்ள வேண்டிய ஜாக்பாட் title=

Unified Member Epfo Interest: நீங்கள் ஒரு PF கணக்கு வைத்திருப்பவராக இருந்தால், இந்த செய்தி உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஏனென்றால் ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பில் (EPFO) டெபாசிட் செய்யப்பட்ட தொகையின் வட்டி விகிதம் குறித்த தகவலை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். 2021-22 நிதியாண்டில், EPF-க்கு 8.1 சதவீத வட்டியை அரசாங்கம் வழங்க வேண்டும். இந்த வட்டித் தொகை எவ்வளவு காலத்திற்கு PF கணக்கு வைத்திருப்பவர்களின் கணக்கில் மாற்றப்படும் என்பது குறித்து ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு எந்தத் தகவலும் தெரிவிக்கவில்லை. ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பில் 7 கோடிக்கும் அதிகமான கணக்கு வைத்திருப்பவர்கள் உள்ளனர்.

வட்டி பணம் எவ்வளவு?

ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) 2021-22 நிதியாண்டில் PF கணக்கு வைத்திருப்பவர்களின் கணக்கில் 8.1 சதவீத வட்டியை செலுத்த உள்ளது. ஆனால் இது குறித்து அரசாங்கத்திடம் இருந்து இன்னும் அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகவில்லை. இதனால் பிஎப்பில் டெபாசிட் செய்த தொகைக்கு அரசு எவ்வளவு வட்டி கொடுக்கும் என்ற எதிர்பார்ப்பு பிஎப் சந்தாதாரர்களிடம் இருக்கிறது. 

வட்டி எவ்வாறு கணக்கிடப்படுகிறது?

எந்த பிஎஃப் கணக்கு வைத்திருப்பவரின் கணக்கில் எவ்வளவு பணம் வரும்? என்பது அவரது கணக்கில் டெபாசிட் செய்யப்பட்ட தொகையைப் பொறுத்தது. எவ்வளவு அதிகமாக டெபாசிட் செய்யப்பட்டதோ அந்த அளவுக்கு வட்டி கிடைக்கும். வட்டி 8.1% வீதத்தில் அரசாங்கத்தால் வழங்கப்பட வேண்டும். இந்த வழியில், உங்கள் PF கணக்கில் பத்து லட்சம் ரூபாய் டெபாசிட் செய்யப்பட்டால், உங்களுக்கு வருங்கால வைப்பு நிதியிலிருந்து 81000 ரூபாய் ஆண்டு வட்டி கிடைக்கும்.

மேலும் படிக்க | India Vs Pakistan: டிராவிட் பேச மறுத்த அந்த 4 வார்த்தை; பத்திரிக்கையாளர் சந்திப்பில் சிரிப்பலை

உங்கள் PF-ஐ அரசாங்கம் என்ன செய்கிறது?

PF கணக்கு வைத்திருப்பவரின் கணக்கில் டெபாசிட் செய்யப்பட்ட தொகையை EPFO ​​வெவ்வேறு வழிகளில் முதலீடு செய்கிறது. இந்த முதலீடு செய்யப்பட்ட தொகையில் இருந்து கிடைக்கும் லாபத்தில் ஒரு பகுதி பிஎஃப் கணக்கு வைத்திருப்பவருக்கு வழங்கப்படுகிறது. கடந்த மாதம், அதாவது ஆகஸ்ட் 2022-ல், EPFO ​​தனது நிதியில் 85 சதவீதத்தை கடன் கருவிகளில் முதலீடு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது. 15 சதவீத நிதியை எக்ஸ்சேஞ்ச் டிரேடட் ஃபண்டுகளில் (இடிஎஃப்) முதலீடு செய்வதாகவும் விளக்கம் அளித்தது.

வட்டி எப்போது செலுத்தப்படுகிறது?

PF துறையால் மாதத்தின் அடிப்படையில் வட்டி கணக்கிடப்படுகிறது. ஆனால் பிஎஃப் கணக்கில் வட்டி, நிதியாண்டு முடிந்த பிறகுதான் டெபாசிட் செய்யப்படுகிறது. உங்கள் PF இருப்பை EPFO ​​இணையதளத்தைப் பார்த்து தெரிந்து கொள்ள வேண்டும். 

மேலும் படிக்க | SBI Account: எஸ்பிஐ வங்கியில் புதிய கணக்கு தொடங்குகிறீர்களா? வங்கிக்கு போக வேண்டாம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEata

Trending News