கையில் ரூ.50 ஆயிரம் இருக்கா? ‘இந்த’ தொழிலில் முதலீடு செய்தால் பல லட்சம் வருமானம் வரும்!

Small Scale Business Tips : கையில் சில ஆயிரங்களை வைத்துக்கொண்டு கூட, ஒரு தொழிலில் முதலீடு செய்தால் பின்னர் லட்சக்கணக்கில் வருமானம் பார்க்கலாம். அது என்ன தொழில் தெரியுமா?   

Written by - Yuvashree | Last Updated : Mar 19, 2024, 06:47 PM IST
  • 50ஆயிரத்தில் செய்யக்கூடிய தொழில்
  • பல லட்சங்களில் வருமானம் பார்க்கலாம்
  • என்ன தொழில் தெரியுமா?
கையில் ரூ.50 ஆயிரம் இருக்கா? ‘இந்த’ தொழிலில் முதலீடு செய்தால் பல லட்சம் வருமானம் வரும்! title=

Small Scale Business Tips : இந்திய இளைஞர்கள் பலர், கடந்த சில ஆண்டுகளாக வேலை வாய்ப்பை தேடி அலைவதை விட்டு விட்டு தாங்களாகவே சுய தொழில் தொடங்க ஆரம்பித்து விட்டனர். இதனால் நாட்டின் பொருளாதாரம் பெருகுவதோடு மட்டுமன்றி தனி நபரின் வருமானமும் பெருகும், வேலை வாய்ப்புகளும் அதிகமாகும். திறன் பயிற்சிகள், துறை சார்ந்த படிப்புகள் அதிகமாகி விட்டதால் இவ்வாறு சுய தொழில்களும் அதிகரித்துள்ளன. அது மட்டுமன்றி, முன்னர் போல அல்லாமல் எவ்வளவு குறுகிய முதலீட்டை வைத்து தாெழிலை ஆரம்பித்தாலும் அதிலிருந்து லாபம் பார்க்கலாம் என படிப்பினைகளை சொல்லிக்கொடுக்க ஆட்களும் இருக்கின்றனர். 

ஒரு சில தாெழில்களில், சில ஆயிரங்களை முதலீடு செய்தாலும் லட்சங்களில் லாபத்தை பார்க்கலாம். அந்த வகையில், ரூ.50 ஆயிரம் முதலீடு செய்தாலே நிறைய வருமானத்தை தரும் பொருட்கள் என்னென்ன என்பதை பார்ப்பாேமா? 

மண்புழு உரம்:

வீட்டிலிருந்தே ஏதேனும் தொழில் செய்ய வேண்டும் என்று எண்ணம் கொண்டவர்கள், மண்புழு உர தொழிலை செய்யலாம். இந்த தொழிலுக்கு நம் நாட்டை பொறுத்தவரை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. இதற்கு, விவசாயத்தில் அதிக தேவை இருக்கிறது. இது, சுற்ருச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தாத உர வகைகளுள் இதுவும் ஒன்று. இதை செய்தால் வீட்டில் இருந்தபடியே லட்சக்கணக்கில் சம்பாதிக்கலாம். 

மேலும் படிக்க | 30 வயதுக்கு மேலானவர்கள் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய சேமிப்பு திட்டம்!

மண்புழு உரம் செய்வது எப்படி?

வீட்டில், காலியாக இருக்கும் இடத்தில் மண்புழு உரத்தை தயார் செய்யலாம். இதற்கென்று தனியாக ஒரு இடம் ஒதுக்க தேவையில்லை. விலங்குகளிடம் இருந்து இந்த இடத்தை பாதுகாக்க, முள் வேலி அமைக்கலாம். எங்கு மண்புழுவை தயார் செய்யப்போகிறீர்களோ, அந்த நிலத்தை சமன் செய்துகொள்ள வேண்டும். பின்னர், இதில் டிரிபோலினை போட்டு அதன் மேல் மாட்டு சாணத்தை போட வேண்டும். அந்த சாணத்தின் உயரம், 1 முதல் 1. 5அடி வரை இருக்கலாம். இதையடுத்து இந்த மண்ணிற்குள் மண் புழுக்களை போடலாம். இப்படி செய்தால் ஒரு மாதத்தில் உங்களுக்கு தேவையான உரம் தயாராகி விடும். 

எப்படி விற்பனை செய்ய வேண்டும்?

இந்த மண்புழு உரங்களை பலர் வாங்குவதற்கு பலர் தயாராக இருக்கின்றனர். இதை, அமேசான், ஃப்ளிப் கார்ட் உள்ளிட்ட தளங்களில் கூட விற்பனை செய்யலாம். நேரடியாக விற்பனை செய்தாலும் லாபத்தை அதிகரிக்கலாம். இந்த தொழில் செய்ய, சராசரியாக 30 ஆயிரம் முதல் 50 ஆயிரம் வரை செலவாகலாம். இதன் மூலம் 2 ஆண்டுகளில் 8 லட்சம் முதல் 10 லட்சம் வரை வருமானம் வரலாம். 

(பொறுப்பு துறப்பு: இந்த செய்தி தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. பொதுவான தகவல்களின் அடிப்படையில் எழுதப்பட்டுள்ள இந்த குறிப்புகளை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக துறை சம்பந்தப்பட்டவர்களிடம் ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | உங்கள் சிறுதாெழிலில் இருந்து அதிக வருமானம் பார்க்கலாம்! ‘இதை’ மட்டும் செய்யுங்கள்..

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News