7th Pay Commission: புத்தாண்டில் பம்பர் டிஏ உயர்வு, இன்னும் பல அறிவிப்புகள்

7th Pay Commission: புத்தாண்டின் முதல் மாதத்தில் அதாவது ஜனவரியில் மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி 4 முதல் 5 சதவீதம் வரை அதிகரிப்பு இருக்கக்கூடும். 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Dec 9, 2022, 04:36 PM IST
  • ஃபிட்மெண்ட் ஃபாக்டர் மற்றும் புதிய ஊதிய கமிஷன் குறித்தும் புத்தாண்டில் விவாதிக்கப்படலாம்.
  • ஊழியர்கள் கோரிக்கை விடுத்து வரும் 18 மாதமாக நிலுவைத் தொகை குறித்தும் நல்ல முடிவு வரக்கூடும்.
  • ஏஐசிபிஐ குறியீட்டின் என்ணிக்கை அதிகரித்தது.
7th Pay Commission: புத்தாண்டில் பம்பர் டிஏ உயர்வு, இன்னும் பல அறிவிப்புகள் title=

7வது சம்பள கமிஷன் சமீபத்திய அப்டேட்: மத்திய அரசு ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி. ஊழியர்களின் சம்பளம் மீண்டும் உயரப் போகிறது. அரசு, ஊழியர்களின் அகவிலைப்படியை மீண்டும் பெரிய அளவில் உயர்த்தப் போகிறது. இதுவரை வந்துள்ள ஏஐசிபிஐ இன்டெக்ஸ் தரவுகளின்படி, புத்தாண்டின் முதல் மாதத்தில் அதாவது ஜனவரியில் மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி 4 முதல் 5 சதவீதம் வரை அதிகரிப்பு இருக்கக்கூடும். 

இது தவிர, ஃபிட்மெண்ட் ஃபாக்டர் மற்றும் புதிய ஊதிய கமிஷன் குறித்தும் புத்தாண்டில் விவாதிக்கப்படலாம். இது தவிர, ஊழியர்கள் கோரிக்கை விடுத்து வரும் 18 மாதமாக நிலுவைத் தொகை குறித்தும் நல்ல முடிவு வரக்கூடும். 

ஏஐசிபிஐ குறியீட்டின் என்ணிக்கை அதிகரித்தது

ஊழியர்களின் அகவிலைப்படி அதிகரிப்பு AICPI குறியீட்டின் படி செய்யப்படுகிறது. அகவிலைப்படி ஆண்டுக்கு இருமுறை (ஜனவரி மற்றும் ஜூலை) மதிப்பாய்வு செய்யப்படுகிறது. முன்னதாக செப்டம்பர் மாதத்தில், ஊழியர்களின் அகவிலைப்படி 4% உயர்த்தப்பட்டது. இது ஜூலை 1, 2022 முதல் அமலுக்கு வந்தது. செப்டம்பர் 2022 இல், AICPI எண்ணிக்கை 131.3 ஆக இருந்தது.

மேலும் படிக்க | 7th Pay Commission: DA, DR உயர்வு எப்போது? வெளியான சூப்பர் அப்டேட்! 

இது அக்டோபரில் 1.2 புள்ளிகள் அதிகரித்து 132.5 ஐ எட்டியுள்ளது. முன்னதாக ஆகஸ்ட் மாதத்திலும் இந்த எண்ணிக்கையில் அதிகரிப்பு காணப்பட்டது. அதாவது, ஏஐசிபிஐயின் புள்ளிவிவரங்களில் தொடர்ச்சியான அதிகரிப்பு உள்ளது. இதன் காரணமாக அகவிலைப்படி உயர்வு இருக்கும் என்பது உறுதியாக உள்ளது.

புதிய ஊதியக்கமிஷன் பற்றி பரிசீலிக்கப்படலாம்

புதிய ஆண்டில், புதிய ஊதியக் குழுவை மீண்டும் கொண்டு வருவது குறித்து அரசு பரிசீலிக்கலாம். இருப்பினும், இது குறித்து இதுவரை எந்த புதுப்பிப்பும் இல்லை. மேலும், புதிய ஊதியக் குழுவை அமல்படுத்தும் எந்த யோசனையையும் அரசாங்கம் மறுத்துள்ளது. மறுபுறம் இதை கண்டிப்பாக அமல்படுத்த வேண்டும் என ஊழியர் சங்கம் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகிறது. 

இது குறித்து ஒரு வரைவைத் தயாரித்து வருவதாகவும் அது அரசாங்கத்திடம் சமர்ப்பிக்கப்படும் என்றும் தொழிற்சங்கம் கூறுகிறது. அதிகரித்து வரும் பணவீக்கத்தை காரணம் காட்டி, ஊழியர் சங்கம் அடுத்த சம்பள கமிஷனுக்கான கோரிக்கையில் உறுதியாக உள்ளது.

மேலும் படிக்க | 7th Pay Commission: ஊழியர்களின் கணக்கில் ரூ.2 லட்சம் வரவு, டிஏ அரியர் சமீபத்திய அப்டேட் 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

 

Trending News