7th Pay Commission: ஊழியர்களுக்கு பம்பர் செய்தி, இந்த தேதியில் வரும் டிஏ ஹைக் அறிவிப்பு!!

7th Pay Commission: மத்திய அரசு ஊழியர்களுக்கு சூப்பர் செய்தி!! அகவிலைப்படி உயர்வு விரைவில் அரசால் அறிவிக்கப்பட்டு வெளியிடப்படும். அதன் தேதியும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Aug 23, 2022, 11:02 AM IST
  • அகவிலைப்படி எவ்வளவு அதிகரிக்கும்?
  • 38% அகவிலைப்படி தொகை எப்போது வரும்?
  • அதிகபட்ச / குறைந்தபட்ச அடிப்படை சம்பளத்தின் கணக்கீடு இதோ.
7th Pay Commission: ஊழியர்களுக்கு பம்பர் செய்தி, இந்த தேதியில் வரும் டிஏ ஹைக் அறிவிப்பு!! title=

7வது ஊதியக்கமிஷன் அகவிலைப்படி உயர்வு: மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படிக்கான காத்திருப்பு விரைவில் முடிவுக்கு வருகிறது. அகவிலைப்படி உயர்வு விரைவில் அரசால் அறிவிக்கப்பட்டு வெளியிடப்படும். அதன் தேதியும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அரசின் அகவிலைப்படி பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு செப்டம்பர் 28 அன்று அதாவது நவராத்திரியின் போது வெளியிடப்படும். இது செப்டம்பர் மாத சம்பளத்துடன் வழங்கப்படும். இந்த வேளையில், ​​ஊழியர்களுக்கு ஜூலை-ஆகஸ்ட் மாதத்திற்கான டிஏ அரியர் தொகையும் கிடைக்கும்

அகவிலைப்படி எவ்வளவு அதிகரிக்கும்? 

ஊழியர்களின் அகவிலைப்படி அதிகரிப்பை கணக்கிட அரசாங்கம் ஏஐசிபிஐ-டபிள்யூ (அனைத்திந்திய நுகர்வோர் விலைக் குறியீடு- தொழில்துறை பணியாளர்) குறியீட்டின் தரவை பயன்படுத்துகிறது. ஏஐசிபிஐ-டபிள்யூ இன் முதல் பாதியின் புள்ளிவிவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. ஜூன் மாதத்தில் குறியீடு 129.2ஐ எட்டியுள்ளது. குறியீட்டு எண் உயர்வு காரணமாக, டிஏவில் 4 சதவீதம் அதிகரிப்பு இருக்கும் என்பது உறுதி. ஒரு கோடிக்கும் மேற்பட்ட மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் இந்த உயர்வின் பலனைப் பெறுவார்கள்.

மேலும் படிக்க | 7th Pay Commission: ஊழியர்களுக்கு ரூ. 50,000-லிருந்து ரூ.95,000 வரை சம்பளம் உயர வாய்ப்பு! 

38% அகவிலைப்படி தொகை எப்போது வரும்?

அகவிலைப்படி 4 சதவீதம் உயர்த்தப்பட்டால், மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி 38 சதவீதமாக உயர்ந்துள்ளது. உயர்த்தப்பட்ட அகவிலைப்படி செப்டம்பர் 2022 சம்பளத்தில் வழங்கப்படும். புதிய அகவிலைப்படி ஜூலை 1, 2022 முதல் அமலுக்கு வரும். இத்தகைய சூழ்நிலையில் ஜூலை, ஆகஸ்ட் மாத நிலுவைத் தொகையும் இதில் சேர்க்கப்படும். அதை நவராத்திரி நேரத்தில் செலுத்தும் எண்த்தில் அரசு உள்ளதால், ஊழியர்களின் ஊதியத்தில் பம்பர் ஏற்றம் இருக்கும். 

அகவிலைப்படி எவ்வளவு அதிகரிக்கும்? 

டிஏ-வில் 4 சதவீதம் அதிகரிப்பு இருக்கும் என்பதால், மொத்த அகவிலைப்படி 38 சதவீதமாக உயரும். தற்போது மத்திய அரசு ஊழியர்களுக்கு 34 சதவீதம் அகவிலைப்படி வழங்கப்பட்டு வருகிறது. அகவிலைப்படி 38 சதவீதமாக உயர்ந்தால், சம்பளத்தில் குறிப்பிடத்தக்க ஏற்றம் இருக்கும். 

அகவிலைப்படி 4 சதவீதம் அதிகரிக்கப்பட்டால், டிஏ உடன் குறைந்தபட்ச மற்றும் அதிகபட்ச அடிப்படை சம்பளம் எவ்வளவு அதிகரிக்கும் என்று பார்க்கலாம். 

அதிகபட்ச அடிப்படை சம்பளத்தின் கணக்கீடு

1. பணியாளரின் அடிப்படை சம்பளம் - ரூ 56,900
2. புதிய அகவிலைப்படி (38%) - ரூ.21,622/மாதம்
3. இதுவரையிலான அகவிலைப்படி (34%) - ரூ.19,346/மாதம்
4. அகவிலைப்படி அதிகரிப்பு - 21,622-19,346 = ரூ 2,276/மாதம்
5. ஆண்டு ஊதிய உயர்வு - 2,276X12 = ரூ 27,312

குறைந்தபட்ச அடிப்படை சம்பளத்தின் கணக்கீடு

1. பணியாளரின் அடிப்படை சம்பளம் - ரூ.18,000
2. புதிய அகவிலைப்படி (38%) - ரூ.6840/மாதம்
3. இதுவரையிலான அகவிலைப்படி (34%) - ரூ.6120/மாதம்
4. அகவிலைப்படி அதிகரிப்பு - 6840-6120 = ரூ.720/மாதம்
5. ஆண்டு ஊதிய உயர்வு - 720 X12 = ரூ 8,640

மேலும் படிக்க | அரசு ஊழியர்களுக்கு அடித்தது ஜாக்பார்ட்! டிஏ நிலுவை குறித்து வெளியாக தகவல்! 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News