7th Pay Commission: ஊழியர்களுக்கு அடித்தது ஜாக்பாட், உயர்ந்தது டிஏ, இரு தவணைகளில் அரியர்

7th Pay Commission: மத்திய அரசை தொடர்ந்து பீகார், ஜார்கண்ட், பஞ்சாப், இமாச்சல பிரதேசம், சத்தீஸ்கர், உத்தரபிரதேசம், மத்திய பிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட பல மாநில அரசுகளும் தங்கள் ஊழியர்களுக்கு நற்செய்தியை வழங்கியுள்ளன.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Nov 9, 2022, 10:57 AM IST
  • செப்டம்பர் மாதம் மத்திய அரசு லட்சக்கணக்கான மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியை அதிகரித்து பரிசளித்தது.
  • இதைத் தொடர்ந்து பல மாநிலங்களில் தொடர்ந்து ஊழியர்களுக்கு நல்ல செய்தி வந்த வண்ணம் உள்ளது.
  • பல்வேறு மாநில அரசுகள் ஊழியர்களின் அகவிலைப்படியை அதிகரித்து வருகின்றன.
7th Pay Commission: ஊழியர்களுக்கு அடித்தது ஜாக்பாட், உயர்ந்தது டிஏ, இரு தவணைகளில் அரியர் title=

அகவிலைப்படி அதிகரிப்பு: செப்டம்பர் மாதம் மத்திய அரசு லட்சக்கணக்கான மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியை அதிகரித்து பரிசளித்தது. இதைத் தொடர்ந்து பல மாநிலங்களில் தொடர்ந்து ஊழியர்களுக்கு நல்ல செய்தி வந்த வண்ணம் உள்ளது. பல்வேறு மாநில அரசுகள் ஊழியர்களின் அகவிலைப்படியை அதிகரித்து வருகின்றன. மத்திய அரசை தொடர்ந்து பீகார், ஜார்கண்ட், பஞ்சாப், இமாச்சல பிரதேசம், சத்தீஸ்கர், உத்தரபிரதேசம், மத்திய பிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட பல மாநில அரசுகளும் தங்கள் ஊழியர்களுக்கு நற்செய்தியை வழங்கியுள்ளன. இந்த நிலையில், ஜம்மு காஷ்மீர் மாநில அரசு ஊழியர்களின் அகவிலைபப்டியை 38 சதவீதமாக உயர்த்தி செவ்வாய்க்கிழமை அறிவிப்பை வெளியிட்டது. 

அகவிலைப்படி உயர்வு ஜனவரி 1, 2022 முதல் அமலுக்கு வரும்

நிதித்துறை செயலர் பிறப்பித்த உத்தரவில், 7வது ஊதியக் குழுவின் பரிந்துரையின் அடிப்படையில், முழுநேரமாக பணிபுரியும் அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 34 சதவீதத்தில் இருந்து 38 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. அடிப்படைச் சம்பளத்தின் அடிப்படையில் ஊழியர்களுக்கு அகவிலைப்படி வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. புதிய அகவிலைப்படி ஜனவரி 1, 2022 முதல் அமலுக்கு வரும்.

மேலும் படிக்க | 7th Pay Commission: ஊழியர்களுக்கு குட் நியூஸ்; சம்பளத்தில் பம்பர உயர்வு 

நிலுவைத் தொகை இரண்டு தவணைகளில் வழங்கப்படும்

மேலும், ஊழியர்களுக்கு இந்த அகவிலைப்படி அதிகரிப்புக்கான அரியர் தொகை இரண்டு தவணைகளில் ரொக்கமாக வழங்கப்படும் என்றும் உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முதல் தவணை நிலுவைத் தொகை நவம்பர் கடைசி வாரத்திலும், இரண்டாவது தவணை டிசம்பர் மாதத்திலும் வழங்கப்படும். ஓய்வூதியதாரர்களுக்கு தனியான ஆனால் இதே போன்ற உத்தரவு வழங்கப்பட்டுள்ளது. ஓய்வூதியம் பெறுவோரின் அகவிலைப்படியும் 4 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த நிலுவைத் தொகையும் இரண்டு தவணைகளில் தொகையாக வழங்கப்படும்.

முன்னதாக, மத்திய அரசுடன், பல மாநில அரசுகளும் அகவிலைப்படியை உயர்த்துவதற்கான அறிவிப்பை வெளியிட்டன. மத்திய மற்றும் பல்வேறு மாநில அரசுகளின் இந்த முடிவால் கோடிக்கணக்கான அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் பயனடைவார்கள். மத்திய அரசு ஊழியர்களுக்கு அடுத்ததாக 2023 ஜனவரியில் அகவிலைப்படி அதிகரிக்கப்படும். இருப்பினும், இதற்கான அறிவிப்பு மார்ச் 2023 இல் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையில், மத்திய அரசு ஊழியர்களுக்கு நிலுவையில் உள்ள 18 மாத அகவிலைப்படி (டிஏ) பாக்கிகள் கிடைக்க வாய்ப்புள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. நீண்ட நாட்களாக அகவிலைப்படி நிலுவைத் தொகையை அரசாங்கம் தங்களுக்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கை அரசு ஊழியர்கள் மத்தியில் வலுத்து வருகிறது.

மேலும் படிக்க | 7th Pay Commission: அகவிலைப்படி அரியர் தொகை பற்றிய முக்கிய அப்டேட் 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

 

Trending News