மத்திய அரசு ஊழியர்களின் ஊதியத்தில் மிகப்பெரிய உயர்வு: ஏற்றம் காணும் 2 அலவன்சுகள்

7th Pay Commission: ஊழியர்களுக்கு இந்த ஆண்டு துவக்கத்திலேயே ஊதியத்தில் மிகப்பெரிய ஏற்றம் ஏற்படும். ஊழியர்கள் எதிர்பார்த்து காத்திருக்கும் அகவிலைப்படி உயர்வு மட்டுமின்றி மற்றொரு அலவன்சிலும் ஏற்றம் இருக்கும்.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Jan 9, 2024, 08:48 AM IST
  • அகவிலைப்படி எவ்வளவு உயர்த்தப்படும்?
  • நகரங்களின் அடிப்படையில் HRA எவ்வாறு வேறுபடுகிறது?
  • HRA க்கான நகர வாரியான வகையை இங்கே காணலாம்.
மத்திய அரசு ஊழியர்களின் ஊதியத்தில் மிகப்பெரிய உயர்வு: ஏற்றம் காணும் 2 அலவன்சுகள் title=

7வது சம்பள கமிஷன், சமீபத்திய செய்திகள்: மத்திய அரசு ஊழியர்களுக்கு முக்கிய அப்டேட் வந்துள்ளது!! 2024 புத்தாண்டு மத்திய அரசு ஊழியர்களுக்கு பல நல்ல செய்திகளை கொண்டுவந்துள்ளது. ஊழியர்களுக்கு இந்த ஆண்டு துவக்கத்திலேயே ஊதியத்தில் மிகப்பெரிய ஏற்றம் ஏற்படும். ஊழியர்கள் எதிர்பார்த்து காத்திருக்கும் அகவிலைப்படி உயர்வு மட்டுமின்றி மற்றொரு அலவன்சிலும் ஏற்றம் இருக்கும். இவற்றின் காரணமாக ஒட்டுமொத்த ஊதியத்தில் நல்ல உயர்வு காணப்படும். இந்த  ஏற்றங்களை பற்றி இந்த பதிவில் காணலாம்.

அகவிலைப்படி உயர்வு (Dearness Allowance)

ஜனவரி 2024 -இல் அகவிலைப்படி 4 அல்லது 5 சதவிகிதம் அதிகரிக்கும் (DA Hike) என எதிர்பார்க்கப்படுகின்றது. அதன் பிறகு உழியர்களின் மொத்த அகவிலைப்படி 50 அல்லது 51 சதவிகிதமாக அதிகரிக்கும். இது ஊழியர்களின் ஊதியத்தில் மிகப்பெரிய ஏற்றத்தை கொண்டு வரும். 

AICPI குறியீட்டு புள்ளிவிவரங்கள் எப்படி உள்ளன? 

ஏஐசிபிஐ குறியீட்டின் (AICPI Index) சமீபத்திய புள்ளிவிவரங்கள் 138.4 மதிப்பெண்களைக் காட்டுகின்றன. இதில் 0.9 புள்ளிகள் உயர்வு ஏற்பட்டுள்ளது. அக்டோபர் மாதத்திற்கான தரவு இது. நவம்பர் மாத இறுதியில் இந்த தரவு வெளியிடப்பட்டுள்ளது. இன்னும் நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களுக்கான தரவு வரவேண்டும். ஒவ்வொரு ஆண்டும் இரு முறை அகவிலைபப்டியில் மாற்றம் ஏற்படுகின்றது. ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில் அகவிலைபப்டி திருத்தப்படுகின்றது. முந்தைய ஆண்டில் ஜூலை முதல் டிசம்பர் வரையிலான மாதங்களின் ஏஐசிபிஐ தரவின் அடிப்படையில் ஜனவரி மாத அகவிலைப்படியும் (DA), ஜனவரி முதல் ஜூன் வரையிலான ஏஐசிபிஐ குறியீட்டின் அடிப்படையில் ஜூலை மாத அகவிலைப்படியும் தீர்மானிக்கப்படுகின்றன.

வீட்டு வாடகை கொடுப்பனவு (House Rent Allowance) 

அகவிலைபப்டி 50 சதவீதத்தை எட்டியவுடன், எச்ஆர்ஏ நகர வகைகளுக்கு ஏற்ப 30%, 20% மற்றும் 10% ஆக மாறும் என 7வது ஊதியக்குழு (7th Pay Commission) குறிப்பாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. X, Y மற்றும் Z வகுப்பு நகரங்களின்படி வீட்டு வாடகை கொடுப்பனவு வகைகள் உள்ளன. தற்போதுள்ள நிலவரப்படி எக்ஸ் பிரிவில் வரும் மத்திய ஊழியர்களுக்கு 27 சதவீத ஹெச்ஆர்ஏ கிடைக்கிறது. டிஏ 50% ஆக உயர்ந்தால், இது 30% ஆகிவிடும். அதே நேரத்தில், ஒய் பிரிவு ஊழியர்களுக்கு இது 18 சதவீதத்தில் இருந்து 20 சதவீதமாக உயரும். இசட் வகுப்பு மக்களுக்கு இது 9 சதவீதத்தில் இருந்து 10 சதவீதமாக உயரும்.

நகரங்களின் அடிப்படையில் HRA எவ்வாறு வேறுபடுகிறது

வாடகை வீட்டில் வசிக்கும் ஊழியர்கள் HRA இன் பலனைப் பெறுகிறார்கள். HRA அளவு நகரத்திற்கு நகரம் வேறுபடுகிறது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். எடுத்துக்காட்டாக, டயர்-2 அல்லது டயர்-3 நகரங்களில் வசிக்கும் பணியாளரை விட டயர்-1 நகரங்களில் வசிக்கும் பணியாளர்கள் அதிக HRA பெறுவார்கள்.

மேலும் படிக்க | 7th pay Commission: அரசு ஊழியர்களுக்கு ஜாக்பார்ட்! விரைவில் இந்த இரண்டு அறிவிப்புகள்!

அகவிலைப்படி எவ்வளவு உயர்த்தப்படும்? 

மத்திய அரசின் (Central Government) கீழ் பணிபுரியும் அரசு ஊழியர்களுக்கு தற்போது 46% அகவிலைப்படி வழங்கப்படுகிறது. ஜனவரி 2024 -இல் டிஏ உயர்வு அமலுக்கு வரும். இதற்லான அறிவிப்பு ஹோலி பண்டிகைக்கு முன்னதாக வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பொதுவாக, ஒரு ஆண்டில் இரு முறை, அதாவது ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில் அகவிலைப்படியில் திருத்தம் செய்யப்படுகின்றது. இது ஏஐசிபிஐ குறியீட்டின் (AICPI Index) அரையாண்டு தரவுகளின் அடிப்படையில் திருத்தப்படுகிறது. குறிப்பிடத்தக்க வகையில், 2023 ஆம் ஆண்டில் டிஏ மொத்தம் 8% அதிகரிக்கப்பட்டது. தற்போதும், மத்திய அரசு ஊழியர்கள் (Central Government Employees) 4% அல்லது அதற்கு மேற்பட்ட உயர்வை எதிர்பார்க்கின்றனர்.

HRA க்கான நகர வாரியான வகையை இங்கே காணலாம்

மத்திய அரசு ஊழியர்கள் அவர்கள் வசிக்கும் நகரத்திற்கு ஏற்ப HRA பெறுகிறார்கள். நகரத்தின் அடிப்படையில், HRA 3 வகைகளாக பிரிக்கப்பட்டுள்ளது - X, Y மற்றும் Z.

7வது ஊதியக் குழுவின் கீழ் மத்திய ஊதியக் குழுவின் (CPC) பரிந்துரையின்படி, 'X' பிரிவில் உள்ள நகரம் 50 லட்சம் மற்றும் அதற்கு மேற்பட்ட மக்கள்தொகை கொண்ட பகுதிகளை உள்ளடக்கியது. 5 லட்சம் முதல் 50 லட்சம் மக்கள்தொகை கொண்ட நகரம் ‘Y’ பிரிவின் கீழ் வருகிறது. மேலும் ‘Z’ நகரப் பிரிவில் 5 லட்சத்துக்கும் குறைவான மக்கள்தொகை கொண்ட ஊழியர்களும் அடங்குவர். 

மேலும் படிக்க | Post Office MIS: மாதம் ரூ.9,250 வருமானம் வருமானம் கொடுக்கும் அசத்தல் திட்டம்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News