மரண தண்டனை கைதியான தனது மகளை 11 ஆண்டுக்கு பின் சந்தித்த தாய்!

ஏமன் சிறையில் இருக்கும் தனது மகள் நிமிஷா ப்ரியாவை சந்திக்க அவரது தாய் இந்தியாவில் இருந்து வந்தார். ஏமன் நாட்டில் செவிலியராக பணிபுரிந்த கேரளாவைச் சேர்ந்த நிமிஷா பிரியாவுக்கு, கொலை வழக்கு ஒன்றில் 2018ம் ஆண்டு மரணதண்டனை விதிக்கப்பட்டது.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Apr 25, 2024, 07:01 PM IST
  • கொலைக் குற்றச்சாட்டில் மகள் ஏமன் சிறையில் மரண தண்டனை அனுபவித்து வருகிறார்.
  • பாஸ்போர்ட் எடுக்க முயன்ற போது நடந்த கொலை.
  • மகளை சந்தித்து சிறையிலிருந்து திரும்பிய நிமிஷா பிரியாவின் தாயார் பிரேமா குமாரி.
மரண தண்டனை கைதியான தனது மகளை 11 ஆண்டுக்கு பின் சந்தித்த தாய்! title=

ஏமன் நாட்டில் செவிலியராக பணிபுரிந்த கேரளாவைச் சேர்ந்த நிமிஷா பிரியாவுக்கு, கொலை வழக்கு ஒன்றில் 2018ம் ஆண்டு மரணதண்டனை விதிக்கப்பட்ட நிலையில், இந்தத் தீர்ப்பை எதிர்த்து அவர் மேல் முறையீடு செய்திருந்தார். ஆனால்,  கடந்த ஆண்டு அவரது மேல்முறையீட்டு மனுவை ஏமன் நாட்டு உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்ததை அடுத்து அவருக்கான மரண தண்டனை உறுதியாகியது.

இந்நிலையில் ஏமன் சிறையில் இருக்கும் தனது மகள் நிமிஷா ப்ரியாவை சந்திக்க அவரது தாய் இந்தியாவில் இருந்து வந்தார். இருவரும் ஒருவரை ஒருவர் கட்டிப்பிடித்து நீண்ட நேரம் அழுது கொண்டிருந்தனர். சிறையில் இருந்த மற்றவர்களும் இவர்களை பார்த்து உணர்ச்சிவசப்பட்டார்கள். அவளது அம்மா தன் மகளை பார்ப்பேன் என்று நினைக்கவில்லை என்று ஒரு வீடியோவை வெளியிட்டார். கொலைக் குற்றச்சாட்டில் மகள் ஏமன் சிறையில் மரண தண்டனை அனுபவித்து வருகிறார்.

ஏமன் நாட்டு பிரஜையை கொலை செய்த வழக்கில் பல ஆண்டுகளாக ஏமன் சிறையில் தண்டனை அனுபவித்து வருகிறார் நிமிஷா பிரியா. இந்தியாவில் (India) வசிக்கும் அவரது தாயார் அவரை சந்திக்க பல வருடங்களாக முயற்சி செய்து வந்தார். கடந்த ஆண்டு டிசம்பரில், தனது மகளின் மரண தண்டனையை நீக்க முயற்சி எடுக்க, ஏமன் செல்ல அனுமதி கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அனுமதி பெற்று இந்தியாவில் இருந்து ஏமன் சென்றார். மகளை சந்திக்க அனுமதி கேட்டிருந்தார்.

மகளை சந்தித்து சிறையிலிருந்து திரும்பிய நிமிஷா பிரியாவின் தாயார் பிரேமா குமாரி, தனது உணர்வுகளை வீடியோ மூலம் வெளிப்படுத்தியதோடு, இந்திய அரசு மற்றும் ஏமன் அரசுக்கு நன்றியும் தெரிவித்துள்ளார். அரசின் கருணையால் மகள் நலமாக உள்ளாள் என்றார்.

தான் ஜெயிலுக்குப் போனதும், தூரத்தில் இருந்து பார்த்தவுடனே தன் மகள் ஓடி வந்து கட்டிக் கொண்டாள். அவள் அழுது கொண்டே என்னை மம்மி என்று அழைத்தாள். இருவரும் வெகுநேரம் கட்டிப்பிடித்து அழுதுகொண்டே இருந்தோம் என்றார் பிரேமா. பின்னர் நிமிஷா அம்மா அழாதே எல்லாம் சரியாகிவிடும் என்று கூறி கண்ணீரை துடைத்து என்னை மீண்டும் அணைத்துக் கொண்டாள். 

மேலும் படிக்க | இந்தியாவின் மீன் கறி மசாலாவில் நச்சுப் பொருள்...? திருப்பி அனுப்பும் சிங்கப்பூர் - முழு விவரம்!

பல வருடங்களுக்குப் பிறகு என் மகளைப் பார்க்கிறேன் என்று பிரேமா குமாரி கூறினார். நான் அங்கு தங்கியிருக்கும் வரை என் மகளை விட்டு நீங்கவேயில்லை என்று கூறினார்.  இருவரும் சிறையில் ஒன்றாக உணவு சாப்பிட்டு பேசிக் கொண்டிருந்தனர்.

சிறையில் அடைக்கப்பட்டுள்ள மற்ற பெண்களையும் சந்தித்ததாகவும், அவர்களில் பலர் தன்னை கட்டிப்பிடித்து தங்கள் அன்பை வெளிப்படுத்தியதாகவும் பிரேமா கூறினார். நிமிஷாவிடம் சிற்ரையில் உள்ள மற்ற பெண்கள் நடந்து கொள்வதை பார்த்ததும் தான் நிம்மதி அடைந்ததாக நிமிஷாவின் தாய் கூறினார். தன் மகளை இனி எப்போது பார்ப்பேனா என்று உறுதியாக தெரியவில்லை என்றார். நாங்கள் இருவரும் இப்படி அழுவதைப் பார்த்து சுற்றி இருந்தவர்களும் உணர்ச்சிவசப்பட்டதாகவும் அவர் கூறினார். அம்மா கவலை படாதே எல்லாம் சரியாகும், சந்தோஷமாக இரு என்று நிமிஷா சொன்னதாக பிரேமா கூறினார்.

நிமிஷா பிரியா மேற்கு ஆசிய நாட்டில் செவிலியராக பணியாற்றி வந்தார். தனது பாஸ்போர்ட் தலால் அப்தோ மஹ்தியிடம் இருந்ததாக நிமிஷா கூறுகிறார். பலமுறை பாஸ்போர்ட்டைத் திரும்பக் கேட்டும் அவர் அதைத் திரும்பக் கொடுக்கவில்லை. அப்போது பாஸ்போர்ட்டை திரும்ப பெற நிமிஷா போதை மருந்து கொடுத்துள்ளார். அதனால் அவர் மயக்கமடைந்தார். மயக்க நிலையில் இருந்த நிமிஷா பாஸ்போர்ட்டை எடுத்துக்கொண்டு ஓட விரும்பினாள். ஆனால் தலால் அப்டோ போதைப்பொருள் அதிகமாக உட்கொண்டதால் உயிரிழந்தார். நிமிஷாவின் மரணம் தொடர்பான குற்றச்சாட்டில் ஜூலை 2017 முதல் சிறையில் உள்ளார். கொலை வழக்கில் நிமிஷாவுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.

மேலும் படிக்க | பாரபட்சம் காட்டும் நெஸ்லே... இந்தியாவில் விற்கப்படும் குழந்தை உணவுகளில் சர்க்கரை!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News