ஸ்டெர்லைட் ஆலை மனு தள்ளுபடி செய்தது சுப்ரீம் கோர்ட்

ஸ்டெர்லைட் ஆலையை திறக்க உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி செய்தது. 

Last Updated : Apr 12, 2019, 01:12 PM IST
ஸ்டெர்லைட் ஆலை மனு தள்ளுபடி செய்தது சுப்ரீம் கோர்ட் title=

ஸ்டெர்லைட் ஆலையை திறக்க உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி செய்தது. 

தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கடந்த ஆண்டு மே மாதம் நடைபெற்ற போராட்டத்தின் போது துப்பாக்கி சூட்டில் 13 பேர் பலியானதை தொடர்ந்து, அந்த ஆலையை மூட தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரியம் உத்தரவிட்டது. 

இந்நிலையில் தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதி கோரி வேதாந்தா நிறுவனம் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தது. இந்த மனுவை இன்று விசாரித்த நீதிமன்றம், சென்னை உயர் நீதிமன்றத்தில் இது தொடர்பான வழக்கு விசாரணையில் இருக்கும்போது, அதனை மீறி விசாரிக்க முடியாது என்று கூறி மனுவை தள்ளுபடி செய்தனர்.

Trending News