அவை முன்னவர் பதவியிலிருந்து செங்கோட்டையன் பதவி பறிப்பு: ஓபிஎஸ் மீண்டும் நியமனம்!!

தமிழக சட்டசபையின் அவை முன்னவராக துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் மீண்டும் நியமிக்கப்பட்டு, அவை முன்னவராக இருந்த செங்கோட்டையனின் பதவி பறிக்கப்பட்டுள்ளது.  

Last Updated : Jan 4, 2018, 02:24 PM IST
அவை முன்னவர் பதவியிலிருந்து செங்கோட்டையன் பதவி பறிப்பு: ஓபிஎஸ் மீண்டும் நியமனம்!! title=

தமிழக சட்டசபையின் அவை முன்னவராக துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார். அவை முன்னவர் பதவியிலிருந்து செங்கோட்டையன் விடுவிக்கபட்டுள்ளார்.

கடந்த 2011- 16 வரை ஜெயலலிதா முதலமைச்சராக இருந்த போது ஓ.பன்னீர்செல்வம் அவை முன்னவராக இருந்தார். பின்னர் அதிமுக இருஅணிகளாக பிரிந்து எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசு பொறுப்பேற்ற பின்னர் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அவை முன்னவராக செயல்பட்டு வந்தார். 

தற்போது அணிகள் இணைந்ததை தொடர்ந்து பன்னீர்செல்வம் மீண்டும் அவை முன்னவராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சட்டப்பேரவையின் முன்னவராக நியமிக்கப்படுவதாக பேரவை செயலாளர் பூபதி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Trending News