தினகரனுக்கு மே 15 வரை நீதிமன்ற காவல் நீட்டிப்பு

Last Updated : May 1, 2017, 04:33 PM IST
தினகரனுக்கு மே 15 வரை நீதிமன்ற காவல் நீட்டிப்பு title=

இரட்டை இலை சின்னம் பெற தேர்தல் கமிஷனுக்கு லஞ்சம் கொடுக்க முயற்சித்த வழக்கில் டிடிவி தினகரனை 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க வேண்டும் என டெல்லி தீஸ் ஹசாரி கோர்ட் இன்று உத்தரவிட்டது.

கடந்த வாரம் டிடிவி தினகரனை டெல்லி குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். தினகரனை 5 நாட்கள் போலீசார் டெல்லி, சென்னை உள்ளிட்ட இடங்களுக்கு அழைத்து சென்று விசாரித்தனர். 

இதற்கிடையே டிடிவி தினகரனுக்கு வழங்கப்பட்டுள்ள 5 நாள் போலீஸ் காவல் இன்றுடன் முடிவடைந்தது. இதனைத் தொடர்ந்து போலீசார் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தினார்கள். அப்போது மே 15-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் அடைக்கும்படி நீதிபதி உத்தரவிட்டார். மே 15 வரை நீதிமன்ற காவல் விதித்து உத்தரவிடப்பட்டுள்ள நிலையில் திகார் சிறையில் அடைக்கப்படுகிறார் டிடிவி தினகரன். 

Trending News