IPL 2020 ஏலம்: ரூ. 6.75 கோடிக்கு பியூஷ் சாவ்லாவை வாங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ்

இந்திய அணியின் சுழல் பந்து வீச்சாளர் பியூஷ் சாவ்லாவை தன் பக்கம் இழுத்துக்கொண்ட சென்னை சூப்பர் கிங்ஸ்.

Written by - Shiva Murugesan | Last Updated : Dec 19, 2019, 05:43 PM IST
IPL 2020 ஏலம்: ரூ. 6.75 கோடிக்கு பியூஷ் சாவ்லாவை வாங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் title=

கொல்கத்தா: இந்தியன் பிரீமியர் லீக் 2020-க்கு இன்று மிக முக்கியமான நாள் ஆகும். எதிர்வரும் தொடரில் விளையாடும் 8 அணிகள் மற்றும் அதன் உரிமையாளர்கள் கொல்கத்தாவில் இன்று அமர்ந்து அடுத்த பதிப்பிற்கு முன்பு தங்கள் அணியை வலுப்படுத்த தங்களுக்கு பிடித்த வீரர்களை ஏலம் எடுத்து வருகின்றனர். ரூ .4.4 கோடிக்கு ஆரோன் பிஞ்ச்-ஐ ஆர்.சி.பி. அணி எடுத்தது. கொல்கத்தா நைட் ரைடர்ஸுக்கு அணிக்காக ரூ .15.5 கோடிக்கு பேட் கம்மின்ஸ் ஏலம் எடுக்கப்பட்டார். இன்று தொடர்ந்து நடைபெற்று வரும் ஏலத்தில் பல வீரர்கள் ஏலம் எடுக்கப்பட்டு உள்ளனர். அதன் ஒரு பகுதியாக ரூ. 6.75 கோடிக்கு பியூஷ் சாவ்லாவை ஏலம் எடுத்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி

ஐ.பி.எல் ஏலத்தில் ஒரு உக்கிரமான தொடக்கத்திற்குப் பிறகு, ஷெல்டன் கோட்ரெல் கிங்ஸ் லெவன் பஞ்சாபிற்கு ரூ .8.5 கோடிக்கும், நாதன் கூல்டர்-நைல் மும்பை இந்தியன்ஸுக்கு ரூ.8 கோடிக்குச் சென்றார்கள். 

இந்த ஏலத்தில் எட்டு அணியின் உரிமையாளர்கள் பட்டியலில் உள்ள 338 வீரர்களின் 73 வீரர்களை தேர்ந்தடுக்க வேண்டும். ஐ.பி.எல் 2020 தொடரில் சவால் விடும் அணிகளை உருவாக்க விரும்பும் அனைத்து உரிமையாளர்களுக்கும், வீரர்களை தேர்ந்தெடுப்பது முக்கியம்.

 

எந்த அணிக்கு எத்தனை வீரர்கள் தேவை? அவர்கள் வைத்திருக்கும் பணம்? பார்ப்போம்..!!

சென்னை சூப்பர் கிங்ஸ்: ஏலத்தில் நுழைவதற்கு அந்த அணியின் பணப்பையில் 14.60 கோடி ரூபாய் உள்ளது. இந்த அணிக்கு மூன்று இந்திய மற்றும் இரண்டு வெளிநாட்டு வீரர்கள் தேவைபடுகிறார்கள்.

மும்பை இந்தியன்ஸ்: இந்த IPL சாம்பியன் அணி ஏலத்தில் இறங்குவதற்கு முன் பணப்பையில் 13.50 கோடி ரூபாய் கொண்டுள்ளது. இதற்கு இன்னும் 5 உள்நாட்டு மற்றும் 2 வெளிநாட்டு வீரர்கள் தேவை.

டெல்லி கேப்பிடல்ஸ்: இளைஞர்கள் நிறைந்த இந்த அணியின் பணப்பையில் மொத்தம் 27.85 கோடி உள்ளது, மேலும் 6 இந்தியர்களுடன் 5 வெளிநாட்டு வீரர்களின் இடமும் அணியில் காலியாக உள்ளது.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ்: தங்களது பழைய நம்பகமான அனைத்து வீரர்களையும் வெளியிட்ட கொல்கத்தா, பணப்பையில் ரூ. 36.65 உள்ளது. அணியை முழுமையாக்க அவர்களுக்கு இன்னும் 7 இந்திய மற்றும் 4 வெளிநாட்டு வீரர்கள் தேவை.

கிங்ஸ் லெவன் பஞ்சாப்: ஏலத்திற்கு செல்லும் அணிகளில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு அதிக பணம் உள்ளது எனலாம். அதன் அணியை முழுமையாக்க மொத்தம் 9 வீரர்கள் தேவை. அதில் 5 இந்திய மற்றும் 4 வெளிநாட்டு வீரர்கள் அடங்குவர்.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்: இந்தியன் பிரீமியர் லீக்கில் மிகவும் பின்தங்கிய அணிகளில் ஒன்றான RCB இந்த முறை சிறப்பாக செயல்பட சில நல்ல வீரர்கள் தேவை. இந்த அணிக்கு 27.90 கோடி ரூபாய் உள்ளது, மேலும் 6 இந்தியர்கள் மற்றும் 6 வெளிநாட்டு வீரர்கள் தேவை.

ராஜஸ்தான் ராயல்ஸ்: இந்தியன் பிரீமியர் லீக்கின் முதல் சீசனில் வெற்றிபெற்ற ராஜஸ்தான் அணி 28.90 கோடி ரூபாய் கையிருப்பு கொண்டுள்ளது. அணிக்கு மொத்தம் 11 வீரர்கள் தேவை. இதில் 7 இந்தியர்கள் மற்றும் 4 வெளிநாட்டு வீரர்கள் அடங்குவர்.

சன்ரைசர்ஸ் ஹைதராபாத்: இரண்டு முறை சாம்பியனான ஹைதராபாத் அணி பணப்பையில் 17 கோடி கொண்டுள்ளது. இந்த அணிக்கு 5 இந்திய மற்றும் 2 வெளிநாட்டு வீரர்கள் தேவை.

உங்களுக்கு சுவாரஸ்யமான சிறப்பு செய்தி, முக்கிய செய்திகள், அரசியல் குறித்து விவரங்களை தெரிந்துக்கொள்ள நமது ZEE HINDUSTAN TV ஐ பாருங்கள். தற்போது ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஒளிப்பரப்பாகிறது.

Trending News