பூஜை அறையில் மறந்தும் செய்யக்கூடாத தவறுகள்..! அலட்சியம் வேண்டாம்

பூஜை அறைகளில் சில தவறுகள் மறந்தும் செயக்கூடாது. வைக்கப்படும் கடவுளின் திசைகள் தவறாக இருக்கக்கூடாது. சிலைகள் அதிக எண்ணிக்கையிலும், உயரமாகவும் இருப்பதை தவிர்க்க வேண்டும்.  

Written by - S.Karthikeyan | Last Updated : Feb 23, 2023, 08:11 PM IST
பூஜை அறையில் மறந்தும் செய்யக்கூடாத தவறுகள்..! அலட்சியம் வேண்டாம் title=

வீடுகளில் வழிபாடு நடத்துவதற்கும் சில முறைகள் உள்ளன. அவற்றை பற்றி வேதங்களில் பல இடங்களில் கூறப்பட்டுள்ளது. அதன்படி, வீட்டில் பூஜை செய்யும் இடம் சரியான திசையில் அமைந்தால் வாழ்வில் அமைதியும் மகிழ்ச்சியும் நிலவும். மாறாக, தவறான திசையில் வீட்டின் வழிபாட்டு அறை இருந்தால், பல வகையான பிரச்சனைகளை சந்திக்க வேண்டியிருக்கும். மேலும், பூஜை அறையில் சில பொருட்கள் இருக்கக்கூடாது என்ற ஐதீகமும் இருக்கிறது. அதனையும் தவிர்க்க வேண்டும்.

விநாயகர் சிலை

வழிபாட்டு அறையில் விநாயகர் சிலை வைப்பது மங்களகரமானதாக கருதப்பட்டாலும், 3 விநாயகர் சிலைகள் இருக்கக்கூடாது. மூன்று அல்லது மூன்றுக்கும் மேற்பட்ட சிலைகள் இருந்து, அவற்றை வழிபட்டு வந்தால் வீட்டில் அமைதியின்மை ஏற்படும். 2 விநாயகர் சிலைகள் வைத்து வழிபடுங்கள். மேலும், வீட்டில் வைக்கப்படும் சிலைகள் மிகப்பெரிய அளவில் இருத்தல் கூடாது. குறிப்பாக சிவலிங்கம் இருந்தால், கை கட்டைவிரல் அளவை விட பெரியதாக இருக்கக்கூடாது.  

மேலும் படிக்க | Astro Alert: மார்ச் மாதத்தில் கிரகம் என்ன சொல்லுது? எச்சரிக்கையா இல்லைன்னா பிரச்சனை

சங்கு வழிபாடு

கோவில்களில் சங்கு வழிபாடுகள் நடைபெறுவதை பார்த்திருப்பீர்கள். 108 அல்லது 1008 சங்குகள் வைத்து பிரம்மாண்டமாக வழிபாடு நடத்தப்படும். ஆனால், வீட்டில் ஒன்றுக்கும் மேற்பட்ட சங்குகளை வைத்து வழிபடக்கூடாது. ஒன்றுக்கும் மேற்பட்ட சங்குகள் இருந்தால், அருகில் இருக்கும் புனித நதிகளில் அவற்றை விட்டுவிட வேண்டும். 

துளசி மாலை

வழிபாடு நடைபெறும் போது ஆரத்தி விளக்கில் போதுமான நெய் அல்லது எண்ணெய் இருப்பதை உறுதி செய்யுங்கள். இடையில் அவை அனைந்து விடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். வழிபாடு நடைபெறும்போது விளக்கு அணைந்தால், அதற்கு பலன் கிட்டாது. தெய்வங்களுக்கு சுத்தமான பூக்களை பயன்டுத்துங்கள். சாஸ்திரங்களின்படி, 11 நாட்களுக்கு மேலான துளசி மாலையை சாமிக்கு இடக்கூடாது. எப்போது துளசி மாலை போட்டாலும் தண்ணீர் தெளித்து அதன்பின்னர் கடவுளுக்கு இட வேண்டும்.

மேலும் படிக்க | Sobakrith: சோப கிருது தமிழ் புத்தாண்டு பலன்கள் மேஷத்துக்கு மங்கலம்! மிதுனத்துக்கு ஐயோ பாவம்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR 

Trending News