டெல்லியில் அமானுஷ்யமா? இணையத்தை மிரள வைக்கும் திகில் வீடியோ

பேய் இருக்கா இல்லையா?. குழந்தைகள் பூங்காவில் உள்ள ஊஞ்சல் எந்த வித இயக்கமும் இல்லாமல் இரண்டில் ஒன்று தானாக ஆடும் வீடியோ!

Last Updated : Jun 28, 2018, 06:36 PM IST
டெல்லியில் அமானுஷ்யமா? இணையத்தை மிரள வைக்கும் திகில் வீடியோ title=

பேய் இருக்கா இல்லையா?. குழந்தைகள் பூங்காவில் உள்ள ஊஞ்சல் எந்த வித இயக்கமும் இல்லாமல் இரண்டில் ஒன்று தானாக ஆடும் வீடியோ!

தற்போதைய காலகட்டத்தில் இளையதலைமுறைகளின் ஹீரோவாக விளங்குவது இணையதளம் என்றே கூறலாம். ஏனென்றால் அதில் பார்க்கமுடியாத விசயங்களே இல்லை. நடனம், தொழில்நுட்பம், பாடல் என அனைத்தையும் ஒரே இடத்தில் இருந்து தெரிந்து கொள்ளலாம். இப்படி இணையத்தில் வைரலாகிய ஒரு வீடியோ-வை பார்த்தோம். அந்த வீடியோவில், குழந்தைகள் பூங்காவில் உள்ள ஒரு ஊஞ்சல் எந்த வித இயக்கமும் இல்லாமல் இரண்டில் ஒன்று தானாக ஆடும் வீடியோ காட்சி அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இதை கண்ட சிலர் இது டெல்லியில் உள்ள CR PARK என்று கூறியுள்ளனர். இந்த வீடியோவில் ஒரு ஊஞ்சல் யாரும் இயக்காத நிலையில் தானாக ஆடுகின்றது. இதை கண்ட பலர் இது வெறும் புரளி. கற்று அடிக்காத நிலையில், அதுவும் ஒரு ஊஞ்சல் மட்டும் எப்படி தானாக ஆடும். இது வெறும் புரளி மற்றவர்களை ஏமாற்றும் உக்தி என்றும் தெரிவித்துள்ளனர். இன்னும் சிலர், வெள்ளை நிற கையிற்றால் ஊஞ்சலை பிடித்து ஆட்டியுள்ளனர் என்றும் தெரிவித்துள்ளனர். 

இந்த வீடியோ பரவலாக முகநூல் மற்றும் கட்செவியஞ்சலில் வைராலாக பரவி வருகிறது. இணையத்தில் வைரலாகும் பல வீடியோக்களை மக்கள் நம்பவில்லை என்றாலும் இது வைரலானாலும் மக்களை குழப்பத்தில் ஆழ்த்தியதுடன் மனதில் பயத்தையும் வரவைத்துள்ளது. 

இதோ அந்த வீடியோ காட்சி கீழே இணைக்கப்பட்டுள்ளது...! 

 

Trending News