சனி பெயர்ச்சி 2023: இனி ‘இவர்கள்’ வாழ்க்கையில் ஏற்றம் தான்!

சனி கிரகம் அனைத்து கிரகங்களிலும் மெதுவாக நகரும் கிரகம். 2023ஆம் ஆண்டின் தொடக்கத்தில் சனி கிரகம் தனது ராசியை மாற்றப் போகிறது. ஜனவரி 17, 2023 அன்று, சனி தனது ராசியை மாற்றி கும்பத்தில் நுழைகிறார். இப்படிப்பட்ட நிலையில் சில ராசிக்காரர்களுக்கு சனியின் மகாதசை முடிவடையும். மேலும், சிலருக்கு நெருக்கடியிலிருந்து ஓய்வு கிடைக்கும்.

1 /4

சனி தனுசு ராசிக்கு மூன்றாவது வீட்டில் சஞ்சரிக்கப் போகிறார். இந்த ராசிக்காரர்களுக்கு கடந்த ஏழரை வருடங்களாக ஏழரை நாட்டு சனி நடந்து வருகிறது. அத்தகைய சூழ்நிலையில், அவர்கள் மன மற்றும் உடல் அழுத்தத்திலிருந்து விடுபடுவார்கள். வாழ்க்கையில் இதுவரை சந்தித்து வரும் பல பிரச்சனைகள் விலகும். பொருளாதார நிலை வலுவாக இருக்கும். உத்தியோகத்தில் பதவி உயர்வும் வாய்ப்பு உண்டு. நீண்ட நாட்களாக செய்ய நினைத்த காரியத்தில் வெற்றி கிடைக்கும்.

2 /4

ஜோதிட சாஸ்திரப்படி சனி துலாம் ராசியின் ஐந்தாம் வீட்டில் சஞ்சரிக்கப் போகிறார். இதன் மூலம் அவர் சனி திசையிடம் இருந்து விடுதலை பெறுவார். நீண்ட நாட்களாக உழைத்து வந்த காரியம் வெற்றி பெறும். குடும்ப வாழ்க்கையில் நல்ல ஒருங்கிணைப்பு இருக்கும். தொழில், வியாபாரத்திலும் அமோக வெற்றி கிடைக்கும். ஒருவருடன் கூட்டு சேர்ந்து பணியாற்ற நினைத்தால், இந்த நேரம் சாதகமாக இருக்கும்.

3 /4

மிதுன ராசிக்கு அதிர்ஷ்ட ஸ்தானத்தில் சனி சஞ்சரிக்கப் போகிறார். மிதுன ராசிக்காரர்களுக்கு 2020ம் ஆண்டு முதல் சனி திசை நடக்கிறது. ஆனால், அவர்கள் இந்த பெயர்ச்சி காலத்தில் சனி திசையிலிருந்து விடுபடுவார்கள். கும்ப ராசியில் சனி சஞ்சரிப்பது இவர்களின் அதிர்ஷ்டத்தை தட்டி எழுப்பும். தொழில், வியாபாரத்தில் அபரிமிதமான வெற்றியைப் பெற முடியும். அதுமட்டுமின்றி குடும்பத்தில் நிலவும் மனக்கசப்பும் நீங்கும். இந்த காலகட்டத்தில் நீண்டகால நோயிலிருந்து நிவாரணம் பெறலாம்.

4 /4

ஜோதிட சாஸ்திரப்படி சனி ரிஷப ராசிக்கு பத்தாம் வீட்டில் சஞ்சரிக்கப் போகிறார். இத்துடன் இந்த ராசிக்காரர்களுக்கு நல்ல நாட்கள் தொடங்கும். இந்த ராசிக்காரர்களின் ஜாதகத்தில் அதிர்ஷ்ட ஸ்தானத்தை சனி பாதித்துக் கொண்டிருந்தது. ஆனால் ஜனவரி மாதம் கும்ப ராசியில் சஞ்சரிப்பதால் சனி தேவரின் கோபம் தீரும். இப்படிப்பட்ட சூழ்நிலையில் இந்த ராசிக்காரர்கள் எல்லாத் துறைகளிலும் வெற்றி பெறுவார்கள். வியாபாரத்திலும் மகத்தான வெற்றியை அடைவார்கள். இதன் போது வெளியூர் பயணங்களுக்கு சுப வாய்ப்புகள் உருவாகும். சனியின் சஞ்சாரத்தால் இந்த ராசிக்காரர்களின் பொருளாதார விஷயங்களில் ஆதாயம் உண்டாகும். சில நாட்களாக இருந்து வந்த பிரச்சனைகளில் இருந்து விடுபடுவீர்கள்.