இந்த ஆன்மீக பரிகாரங்கள் நீங்கள் இழந்த வேலையை உங்களுக்கு மீட்டுக் கொடுக்கும்

கொரோன் வைரஸ் உலகளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த தொற்று மக்களின் ஆரோக்கியத்தையும் அவர்களின் வேலைவாய்ப்பையும் பாதித்துள்ளது. 

மார்ச் முதல் இந்தியாவில் லாக்டௌன் விதிக்கப்பட்டது. இந்த நேரத்தில், பலர் வேலை இழந்தார்கள். இன்றும் கூட பலர் நிதி சிக்கலில் உள்ளனர்.

1 /5

கொரோனாவால் விதிக்கப்பட்ட லாக்டௌனில் உங்கள் வேலை பறிபோயிருந்தாலோ, நீங்கள் இப்போது வேலை தேடிக்கொண்டிருந்தாலோ, சில ஆன்மீக பரிகாரங்கள் உங்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும். இவற்றை செய்தால் வேலை உங்களைத் தேடி வரும் என்பதில் சந்தேகமில்லை. நம்பிக்கை கொண்டு இவற்றை செய்து பாருங்கள். நிச்சயம் பலன் கிடைக்கும்.

2 /5

வாழ்க்கையில் வெற்றியைப் பெற, சனி பகவானின் அருளைப் பேணுவது மிகவும் முக்கியம். எனவே ஒவ்வொரு சனிக்கிழமையும் நீங்கள் சனீஸ்வரனின் சிலைக்கு முன் விளக்குகளை ஏற்றி வழிபட்டு வாருங்கள். சனிபகவானின் தோத்திரங்களையும் சொல்லுங்கள். இதன் மூலம், உங்கள் வேலைவாய்ப்பு பிரச்சினை விரைவில் முடிந்துவிடும்.  

3 /5

அனுமன் நம் துன்பங்களிலிருந்து நிவாரணம் அளித்து நம்மை காப்பவர். ஒருவர் சிக்கலில் இருக்கும்போதெல்லாம், அனுமனை நினைத்துக்கொண்டால் போதும். அவர் அனைத்து சிக்கல்களையும் தீர்த்து விடுவார். தினமும் காலையில் குளித்த பிறகு, அனுமான் சாலிசாவைப் படியுங்கள். செவ்வாய் மற்றும் வியாழக்கிழமைகளில் அனுமன் கோயிலுக்கு சென்று வழிபடுங்கள். இதைச் செய்வதன் மூலம், உங்கள் வேலை பிரச்சினை விரைவில் முடிந்துவிடும்.    

4 /5

ஒருவரது வாழ்க்கையில் மிக முக்கியமான தெய்வம் அவரது குல தெய்வமாகும். குல தெய்வ வழிபாடு மிக அவசியம். அதுவும், நாம் சங்கடத்தில் இருக்கும்போது மனமுருகி குல தெய்வத்தை வழிபட்டால், நம் குல தெய்வம் ஓடி வந்து நம்மை காக்கும். விரைவில் வேலை கிடைக்க குல தெய்வ வழிபாடு மிகச்சிறந்த பலனை அளிக்கும்.

5 /5

நேர்காணலுக்குச் செல்லும்போது, ​​அலுவலகத்தில் நுழையும்போது கண்டிப்பாக வலது காலை முதலில் வைத்து செல்லுங்கள். அது வெற்றிக்கான முதல் படியாக இருக்கும். அதே போல், வீட்டிலிருந்து நேர்காணலுக்கு செல்லும் முன் ஏதாவது இனிப்பாக சாப்பிட்டு விட்டு பிறகு செல்லவும்.