அச்சச்சோ! செவ்வாய் சனியால் இந்த ராசிகளுக்கு விபரீதம், எச்சரிக்கை தேவை

Mangal Shani 2023: செவ்வாய் கடக ராசியிலும், சனி கும்ப ராசியிலும் உள்ளனர். இதனால் ஷடாஷ்டக யோகம் உருவாகுகிறது, இது 4 ராசிக்காரர்களுக்கு மிகவும் அசுபமானதாக கருதப்படுகிறது.

செவ்வாய் சனி 2023: மே 10-ம் தேதி செவ்வாய் கடக ராசிக்குள் பெயர்ச்சியடைந்தார். அதேபோல் திருக்கணித பஞ்சாங்கத்தின் ஜனவரி 17 ஆம் தேதி, சனி தனது அசல் முக்கோண ராசியான கும்பத்தில் 30 ஆண்டுகளுக்குப் பிறகு பெயர்ச்சி அடைந்தார். இதனால் ஷடாஷ்டக யோகம் உருவாகியது. இந்த யோகம் 4 ராசிக்காரர்கள் கவனமாக இருக்க வேண்டும்.

1 /5

ஷடாஷ்டக யோகம்: கிரகங்கள் ஆறாவது மற்றும் எட்டாவது வீட்டில் இருக்கும்போது ஷடாஷ்டக யோகம் உருவாகிறது. இதனால் எந்தெந்த ராசிக்காரர்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று இந்த பதிவில் தெரிந்துக்கொள்வோம்.  

2 /5

கடக ராசி: கடக ராசிக்காரர்கள் ஜூன் 30 வரை பல ஏற்ற தாழ்வுகளை சந்திக்க நேரிடும். நிதி இழப்பு ஏற்படலாம். எனவே இந்தக் காலகட்டத்தில் எங்கும் முதலீடு செய்வதைத் தவிர்க்கவும். உங்கள் ஆரோக்கியத்தையும் கவனித்துக் கொள்ளுங்கள்.  

3 /5

சிம்ம ராசி: சிம்ம ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களைத் தரும். தோல்விகளை சந்திக்க நேரிடலாம். அலுவலகத்தில் பலவிதமான பிரச்சனைகளையும் சவால்களையும் சந்திக்க வேண்டியிருக்கும். செலவுகள் அதிகரிக்கும்.  

4 /5

தனுசு ராசி: ஷடாஷ்டக யோகம் இருப்பதால் கவனமாக இருக்கவும். முதலீடு செய்யும் போது நிபுணர்களின் ஆலோசனையுடன் செய்யுங்கள். நெருங்கியவர் உங்களை ஏமாற்றலாம்.  

5 /5

கும்ப ராசி: ஷடாஷ்டக யோகம் கும்ப ராசிக்காரர்களையும் தொந்தரவு செய்யலாம். வாகனம் ஓட்டும்போது எச்சரிக்கையாக இருங்கள். உங்கள் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள், பிரச்சினைகள் ஏற்படலாம்.