செவ்வாயில் தரையிறங்கும் ரோவரின் அசத்தல் படங்களை வெளியிட்டுள்ளது NASA..!!!

பிப்ரவரி 19 வெள்ளிக்கிழமை செவ்வாய் கிரகத்தில் ரோவர் தரையிறங்கிய முதல் படத்தை உலகம் கண்டது. சிவப்பு கிரகத்தின் தூசி நிறைந்த மேற்பரப்பில் ஒரு ரோவர் இறங்கும் ஒரு 'அசத்தல்' படத்தை நாசா வெளியிட்டுள்ளது. செவ்வாய் கிரகத்தில்  'பெர்சவரன்ஸ்' ரோவர் தரையிறங்கிய 24 மணி நேரத்திற்குள் இந்த படம் வெளியிடப்பட்டுள்ளது. இந்த ரோவர் பண்டைய வாழ்க்கையின் தடயங்களைக் கண்டுபிடிக்கும். மேலும் செவ்வாய் கிரகத்தில் உள்ள பாறையின் உண்மையான மாதிரிகளை பூமிக்கு கொண்டு வர முயற்சிக்கும்.

பிப்ரவரி 19 வெள்ளிக்கிழமை செவ்வாய் கிரகத்தில் ரோவர் தரையிறங்கிய முதல் படத்தை உலகம் கண்டது. சிவப்பு கிரகத்தின் தூசி நிறைந்த மேற்பரப்பில் ஒரு ரோவர் இறங்கும் ஒரு 'அசத்தல்' படத்தை நாசா வெளியிட்டுள்ளது. செவ்வாய் கிரகத்தில்  'பெர்சவரன்ஸ்' ரோவர் தரையிறங்கிய 24 மணி நேரத்திற்குள் இந்த படம் வெளியிடப்பட்டுள்ளது. இந்த ரோவர் பண்டைய வாழ்க்கையின் தடயங்களைக் கண்டுபிடிக்கும். மேலும் செவ்வாய் கிரகத்தில் உள்ள பாறையின் உண்மையான மாதிரிகளை பூமிக்கு கொண்டு வர முயற்சிக்கும்.

 

1 /5

விண்கலத்தில் படங்களை எடுக்க நாசா 25 கேமராக்களை நிறுவியுள்ளது, அதில்இரண்டு மைக்ரோ போன்கள்  குரல் பதிவு செய்வதற்காக சேர்க்கப்பட்டுள்ளன, அவற்றில் பல வியாழக்கிழமை அன்று, ரோவர் மேற்பரப்பில் தரையிறங்கும் போது வேலை செய்யத் தொடங்கின.

2 /5

ரோவர் இரண்டு மீட்டர் தூரத்திலிருந்து எடுக்கப்பட்ட தெளிவான படத்தை அனுப்பியுள்ளது. அதில் கேபிள் வழியாக ஸ்கை கிரேன் உடன் இணைக்கப்பட்டுள்ளது. ராக்கெட் எஞ்சினிலிருந்து சிவப்பு தூசி பறக்கிறது. கலிபோர்னியாவின் பசடேனாவை தளமாகக் கொண்ட நாசாவின் ஜெட் ப்ராபல்ஷன் ஆய்வகம், வரும் நாட்களில் மேலும் புகைப்படங்கள் வெளியிடப்படும் என்றும், ரோவர் தரையிறங்கும்போது பதிவுசெய்யப்பட்ட குரல்களைக் கேட்க முடியும் என்றும் உறுதியளித்துள்ளது.

3 /5

விமான அமைப்பு பொறியாளர் ஆரோன் ஸ்டெஹுரா பத்திரிகையாளர் சந்திப்பில், "இது நாங்கள் இதற்கு முன்பு பார்த்திராத ஒன்று" என்று கூறினார். இது ஆச்சர்யமானதாக இருந்தது, எங்கள் அணி வியப்படைந்தது. இந்த படங்களை பெற்று அவற்றை உலகத்துடன் பகிர்ந்து கொள்ள முடிந்தது என்பதில் வெற்றி உணர்வு ஏற்படுகிறது. ” என்றார். தலைமை பொறியாளர் ஆடம் ஸ்டெல்ட்ஸ்னர் படம் ‘மிக சிறப்பு’ என்று கூறினார்.

4 /5

பூமியில் மேற்கொள்ளப்படும்  நடவடிக்கைகளுக்கான மூலோபாய மிஷன் மேலாளர் பவ்லின் ஹ்வாங், இதுவரை பல புகைப்படங்கள் வந்துள்ளன எனக் கூறினார், ' முதலில் வந்த புகைப்படங்களைப் பார்த்து அணி மகிழ்ச்சியுடன் குதித்தது. துணை திட்ட விஞ்ஞானி கேட்டி ஸ்டாக் மோர்கன், படங்கள் மிகவும் தெளிவாக இருந்தன, அவை ஆரம்பத்தில் அவை அனிமேஷன் என்று நினைத்தோம் என்றார். கடந்த ஏழு மாதங்களில் செவ்வாய் கிரகத்திற்கு இது மூன்றாவது பயணம். முன்னதாக, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் சீனாவிலிருந்து அனுப்பட்ட வாகனம் செவ்வாய் கிரகத்திற்கு அருகே சுற்றுப்பாதையில் நுழைந்தன. விஞ்ஞானிகள் செவ்வாய் கிரகத்தில்  மூன்று முதல் நான்கு பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு உயிர்கள் வாழ்ந்திருந்திருக்கின்றன என்று நம்புகிறார்கள்.  

5 /5

'பெர்சவரன்ஸ் ' என்பது நாசாவின் மிகப் பெரிய ரோவர் (Perseverance rover) ஆகும். இது 1970 களுக்குப் பின்னர் அமெரிக்க விண்வெளி நிறுவனத்தின் ஒன்பதாவது செவ்வாய் கிரக பயண முயற்சியாம். கடந்த ஆண்டு ஜூலை 23 ஆம் தேதி சீனா தனது செவ்வாய் மிஷனின் ஒரு பகுதியாக 'தியான்வென் -1' ஐ அறிமுகப்படுத்தியது. இது பிப்ரவரி 10 அன்று செவ்வாய் கிரகத்தின் சுற்றுப்பாதையை அடைந்தது. அதன் லேண்டர் மே 2021 இல் உட்டோபியா பிளாண்டியா பகுதியில் தரையிறங்க வாய்ப்புள்ளது. ஐக்கிய அரபு எமிரேட்ஸின் செவ்வாய் கிரக பயண முயற்சியான 'ஹோப்' இந்த மாதமும் செவ்வாய் கிரகத்தின் சுற்றுப்பாதையில் நுழைந்துள்ளது.