மெஸ்ஸிக்கு பயத்தை காட்டிய எம்பாப்பே; தோல்விக்கு பிறகு மைதானத்தில் கண்ணீர்

உலக கோப்பை கால்பந்து தோல்விக்குப் பிறகு மைதானத்தில் கண்ணீர்விட்டு அழும் எம்பாப்பே

 

1 /6

அர்ஜெண்டினா அணி கோப்பையை வென்றாலும், அனைவரின் மனங்களையும் வென்றவர் எம்பாப்பே  

2 /6

உலகம் முழுவதும் இருக்கும் கால்பந்து ரசிகர்கள் மெஸ்ஸி கோப்பையை வெல்ல வேண்டும் என அர்ஜெண்டினாவுக்கு ஆதரவு தெரிவித்தனர்.

3 /6

ஆனால், அந்த கோப்பையை எளிதாக எல்லாம் கொடுக்கமாட்டேன் என பம்பரமாக சுழன்று அடுத்தடுத்து 2 கோல்கள் அடித்து அர்ஜெண்டினாவை பயத்தை காட்டியவர் தான் இந்த எம்பாப்பே

4 /6

இளம் வயது என்றாலும் கால்பந்தில் இப்போது அகில உலக சூப்பர் ஸ்டாராக இருக்கிறார். கூடுதல் நேரத்திலும் பிரான்ஸ் அணிக்காக கோல் அடித்து உலக கோப்பை கால்பந்து இறுதிப்போட்டியில் ஹாட்ரிக் கோல் அடித்த இரண்டாவது வீரர் என்ற சாதனைக்கு சொந்தக்காரரானார். 

5 /6

தனி ஒருவனாக ஒட்டுமொத்த பிரான்ஸ் அணிக்கும் நம்பிக்கை கொடுத்து விளையாடிய எம்பாப்பே, பெனால்டி ஷூட்டில் தோல்வியை எதிர்பார்க்கவில்லை.

6 /6

போட்டி முடிந்ததும் மைதானத்திலேயே அமர்ந்து கண்ணீர் விட்டு அழுதார். அவரை பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் தேற்றினார்.