APJ Abdul Kalam - Missile man பற்றிய சுவாரஸ்யமான விஷயங்கள்

இந்தியாவின் 11 வது குடியரசுத் தலைவர், பாரத் ரத்னா, ஏவுகணை நாயகன் ஏபிஜி அப்துல் கலாம்,அதாவது அவுல் பக்கீர் ஜைனுலப்தீன் அப்துல் கலாம்  எழுதிய சுயசரிதை 'விங்ஸ் ஆஃப் ஃபயர்'  (Wings of Fire) ,  இந்தியாவில் வாழ்க்கையில் சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் படைத்த அனைத்து இளைஞர்களிடம் இருக்கும் புத்தகம் எனலாம்.  அவர்களின் பிறந்தநாளில்,அவர் தொடர்பான, சுவாரஸ்யமான விஷயங்களை அறிந்து கொள்ளலாம்.

இந்தியாவின் 11 வது குடியரசுத் தலைவர், பாரத் ரத்னா, ஏவுகணை நாயகன் ஏபிஜி அப்துல் கலாம்,அதாவது அவுல் பக்கீர் ஜைனுலப்தீன் அப்துல் கலாம்  எழுதிய சுயசரிதை 'விங்ஸ் ஆஃப் ஃபயர்'  (Wings of Fire) ,  இந்தியாவில் வாழ்க்கையில் சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் படைத்த அனைத்து இளைஞர்களிடம் இருக்கும் புத்தகம் எனலாம்.  அவர்களின் பிறந்தநாளில்,அவர் தொடர்பான, சுவாரஸ்யமான விஷயங்களை அறிந்து கொள்ளலாம்.

1 /9

இந்தியாவில் முதல் அணுசக்தி சோதனை 1974 இல் புத்த ஜெயந்தி அன்று நடந்தது, இந்த நடவடிக்கைக்கு 'ஸ்மைலிங் புத்தா' என்று பெயரிடப்பட்டது. இந்த திட்டத்துக்கும் கலாமுடன் எந்த தொடர்பும் இல்லை, ஆனால் ஹோமி ஜஹாங்கிர் பாபாவின் மரணத்திற்குப் பிறகு, இந்தியாவின் அணுசக்தி திட்டங்களை கையாளும் விஞ்ஞானி ராஜா ராமண்ணா, இது தொடர்பான நிகழ்ச்சியில் கலந்து கொள்ள கலாமை அழைத்திருந்தார். டிஆர்டிஓவுடன் இணைந்த டெர்மினல் பாலிஸ்டிக்ஸ் ஆராய்ச்சி ஆய்வகத்தின் (TBRL) பிரதிநிதியாக அவர் அழைக்கப்பட்டார்.

2 /9

கலாம் சாமானிய மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கு, தொழில்நுட்பம் மக்களுக்கு மலிவான விலையில் கிடைக்க வேண்டும் என்ற முயற்சியில் தொடர்ந்து ஈடுபட்டார். ஹைதராபாத்தின் கேர் மருத்துவமனையின் தலைவர் சோமா ராஜுவின் உதவியுடன், 'கலாம்-ராஜு ஸ்டென்ட்' என்ற பெயரில் இதய நோயாளிகளுக்கு உதவும் வகையில், மலிவான  சிறந்த கொரோனரி ஸ்டெண்டையும் தயாரித்தார். 14 ஆண்டுகளுக்குப் பிறகு, 2102 இல், இருவரும் சேர்ந்து கிராமப்புறங்களில் உள்ள சுகாதாரப் பணியாளர்களுக்காக ஒரு டேப்லெட் கணினியைத் தயாரித்தனர், அதற்கு 'கலாம்-ராஜு டேப்லெட்' என்று பெயரிடப்பட்டது.  

3 /9

குடியரசு தலைவராக ஆவத்நற்கு முன்பே பாரத ரத்னா வழங்கப்பட்ட மூன்றாவது குடியரசுத் தலைவராக கலாம் இருந்தார். முன்னதாக, டாக்டர் சர்வேபள்ளி ராதாகிருஷ்ணன் மற்றும் டாக்டர் ஜாகிர் உசேன் ஆகியோர் குடியரசுத் தலைவர் பதவிக்கு வருவதற்கு முன்பு பாரத ரத்னா விருது வழங்கி ரவிக்கப்பட்டனர். டாக்டர் கலாம் 1997 ல் பாரத ரத்னாவைப் பெற்றார். 2002 ல் குடியரசுத் தலைவர் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.

4 /9

நாசாவின் ஜெட் ப்ராபல்ஷன் இண்டர்நேஷன்ல் ஸ்பேஸ் ஸ்டேஷன் பில்டர்களில் ஒரு புதிய பாக்டீரியத்தைக் கண்டுபிடித்தது, பின்னர் அதற்கு கலாமின் நினைவாக 'சோலிபாசில்ஸ் கலாமி' என்று பெயரிட்டது. ஒரிசாவில் நடைபெறும் தேசிய ஏவுகணை சோதனை இடத்திற்கு டாக்டர் கலாம் பெயரை அரசாங்கம் சூட்டியுள்ளது.  

5 /9

அவர் தனது ஆன்மீக குருவாக, சுவாமி நாராயண் அவர்களை ஏற்றுக் கொண்டார். பிரமுக் சுவாமிஜியுடன் அவரது ஆன்மீக அனுபவங்கள் என்பது குறித்த புத்தகத்தையும் எழுதினார். 

6 /9

கலாமின் தந்தை ஒரு மசூதியில் ஒரு இமாம்.  கலாம் தினமும் தொழுகை நடத்துவார். மேலும் ரமழான் மாதத்தில் நோன்பு இருப்பார். அதே நேரத்தில் மாலையில், அவரது தந்தை, ராம்நாத சுவாமி கோயிலின் அர்ச்சகர், தேவாலயத்தின் பாதிரி ஆகியோர் இணைந்து ஒரு தேநீர் கடையில் அரட்டை அடிப்பார்கள். குழந்தை பருவத்திலிருந்ந்தே, கலாம் அவர்கள் பிற மத நூல்களை படிக்கும் பழக்கம் இருந்தது. இந்து மதத்தை பற்றி நிறைய அறிந்து வைத்திருந்தார்.

7 /9

அவர் இந்தியாவின் தனித்துவமான குடியரசுத் தலைவராக இருந்தார். பிரம்மச்சாரி, சைவ உணவு உண்பவர், தனக்கென்று தனிப்பட்ட தொலைக்காட்சி இல்லாதவர், மிகவும் எளிமையான வாழ்க்கை வாழ்ந்தவர்.

8 /9

27 ஜூலை 2015 அன்று, ஷில்லாங் ஐ.ஐ.எம்மில் ஒரு நிகழ்ச்சிக்குச் சென்ற ஏ.பி.ஜே. அப்துல் கலாம் திடீரென இருதயக் கைது காரணமாக இறந்தார். இந்த நிகழ்வில் அவரது சக ஊழியர் ஒருவர் தனது கடைசி வார்த்தைகள் - "Fuuny guys, Are you doing well?"

9 /9

ஒரு போர் விமானியாக ஆக வேண்டும் என்பதே கலாமின் குழந்தை பருவ கனவு. ஒரு போர் விமானி ஆக வேண்டும் என்று கனவு கண்டதை அவரே தனது புத்தகங்களில் ஒன்றில் வெளிப்படுத்தினார். விமானப்படை போர் விமானிகளுக்கான 8 காலியிடங்களை நிரப்ப மேற்கொண்ட் அதேர்வில் 9வது தேர்வு பெற்று நூலிழையில் வாய்ப்பை இழந்தார்.  ஆனால், அதனால் தான் நம் நாட்டிற்கு ஏவுகணை நாயகன் கிடைத்தார்.