ஐபிஎல் 2024க்கான புதிய கேப்டனை அறிவித்துள்ள டெல்லி கேபிடல்ஸ்!

Delhi Capitals: ஐபிஎல் 2024ல் டெல்லி கேபிட்டல்ஸ் அணி தனது முதல் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிராக மார்ச் 23ஆம் தேதி விளையாடவுள்ளது.

 

1 /5

இந்தியன் பிரீமியர் லீக் 2024 சீசனுக்கு முன்னதாக புதிய கேப்டனை அறிவித்துள்ளது டெல்லி கேப்பிடல்ஸ். டேவிட் வார்னருக்குப் பதிலாக மீண்டும் ரிஷப் பந்த் கேப்டனாக திரும்பியுள்ளார்.   

2 /5

2022ம் ஆண்டு நடந்த கார் விபத்திற்கு பிறகு ஒரு வருடம் கிரிக்கெட் விளையாடாமல் இருந்து வந்தார் ரிஷப் பந்த். தற்போது 14 மாதங்களுக்குப் பிறகு மீண்டும் விளையாடவுள்ளார்.   

3 /5

கடந்த ஒரு வருடம் நல்ல உடல்நிலையயை பெற கடுமையான பயிற்சிகளில் ஈடுபட்டு வந்தார் ரிஷப் பந்த்.  காலில் அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டு இருந்தது.    

4 /5

இந்தியன் பிரீமியர் லீக்கிற்கு முன்னதாக பிசிசிஐ ரிஷப் பந்த் முழு உடல்தகுதியுடன் உள்ளார் என்று அறிவித்தது.  இதன் பின்பு தற்போது ரிஷப் பந்த் டெல்லி அணியின் கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளார்.   

5 /5

இது குறித்து டெல்லி அணியின் உரிமையாளர்கள் கூறுகையில், “ரிஷப் பந்தை எங்கள் கேப்டனாக வரவேற்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். அவர் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்காக விளையாடுவதைக் காண என்னால் காத்திருக்க முடியாது,” என்று கூறியுள்ளனர்.