மாவீரன் படத்தை என்னால் நிராகரிக்கவே முடியவில்லை - நடிகை சரிதா

மாவீரன் படத்தை நிராகரிக்க எண்ணியிருந்தாலும், என்னால் முடியவில்லை என நடிகை சரிதா தெரிவித்துள்ளார்.

 

1 /6

தமிழ் திரையுலகில் 80களில் முன்னணி நாயகியாக இருந்த நடிகை சரிதா, மாவீரன் படம் மூலம் கம்பேக் கொடுத்துள்ளார்.  

2 /6

அவரின் வருகை திரையுலகில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. அவரும் இது குறித்து சொல்லும்போது இந்த வாய்ப்பை என்னால் தட்ட முடியவில்லை என கூறியுள்ளார்.  

3 /6

நான் திரைப்படங்களில் இருந்து ஒதுங்கியிருந்த காலங்களில் நிறைய கதைகளை கேட்டிருக்கிறேன். கதை கேட்க ஆரம்பிக்கும்போதே நிராகரிக்கும் எண்ணத்திலேயே கதையை கேட்பேன்.  

4 /6

அப்படி பல கதைகளை நான் நிராகரித்திருக்கிறேன். ஆனால் என்னால் மாவீரன் கதையை நிராகரிக்க முடியவில்லை. இயக்குநர் மடோனா அஸ்வின் அப்படி கதை சொல்லி ஈர்க்க வைத்துவிட்டார்.  

5 /6

அவருடைய அம்மாவை மனதில் வைத்து உருவாக்கிய கதாப்பாத்திரம் என்பதால் நானும் ஓகே சொல்லிவிட்டேன் என சிரிப்பாக சொல்கிறார் நடிகை சரிதா.   

6 /6

சிவகார்த்திகேயன் உடன் நடித்த அனுபவம் சிறப்பாக இருந்ததாகவும், அவருடன் மீண்டும் படம் பண்ண ஆர்வமாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார் சரிதா.