டிஏ ஹைக்: 53%-54% அகவிலைப்படி உயர்வு... மத்திய அரசு ஊழியர்களுக்கு இன்று மாலைக்குள் நல்ல செய்தி

7th Pay Commission: அரசு வேலை என்பது எப்போதும் இந்தியாவில் உள்ள மக்களின் விருப்பமாக இருந்து வந்துள்ளது. அதுவும் மத்திய அரசு பணிகளில் வேலை கிடைத்தால், மிகுந்த மகிழ்ச்சி ஏற்படுவதுண்டு. 

7th Pay Commission: ஜூலை 2024 -க்கான அகவிலைப்படி உயர்வு குறித்த அறிவிப்பை மிக விரைவில் அரசு வெளியிடக்கூடும். இந்த அறிவிப்பால், லட்சக்கணக்கான மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு மிகப்பெரிய நிவாரணம் கிடைக்கும். டிஏ உயர்வு (DA Hike) ஊழியர்களின் மாத வருமானத்தை கணிசமாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. செப்டம்பர் 25-ம் தேதி, அதாவது இன்று நடைபெறும் மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் அகவிலைப்படி உயர்வு அறிவிக்கப்படலாம் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

1 /12

மத்திய அரசு ஊழியர்களுக்கு ஒரு முக்கியமான செய்தி உள்ளது. அவர்களது நீண்ட நாள் காத்திருப்பு இன்று முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இன்று நடக்கவுள்ள அமைச்சரவைக் கூட்டத்தில் இதற்கான அறிவிப்பு வெளியாக வாய்ப்புள்ளதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

2 /12

அரசு வேலை என்பது எப்போதும் இந்தியாவில் உள்ள மக்களின் விருப்பமாக இருந்து வந்துள்ளது. அதுவும் மத்திய அரசு பணிகளில் வேலை கிடைத்தால், மிகுந்த மகிழ்ச்சி ஏற்படுவதுண்டு. வேலைக்கான பாதுகாப்பு, நிலையான சம்பளம், 6 மாதங்களுக்கு ஒரு முறை அதிகரிக்கப்படும் அகவிலைப்படி, அலவன்சுகள் என இதில் ஏகப்பட்ட நன்மைகள் கிடைக்கின்றன. 

3 /12

அரசுப் பணிகளில் கிடைக்கும் நன்மைகளில் முக்கியமான ஒன்று Dearness Allowance (DA) எனப்படும் அகவிலைப்படி. இது சுருக்கமாக டிஏ என்று அழைக்கப்படுகிறது. சமீபத்தில் மத்திய ஊழியர்களுக்கு இது குறித்து ஒரு நல்ல செய்தி வெளியாகியுள்ளது.

4 /12

ஜூலை 2024 -க்கான அகவிலைப்படி உயர்வு குறித்த அறிவிப்பை மிக விரைவில் அரசு வெளியிடக்கூடும். இந்த அறிவிப்பால், லட்சக்கணக்கான மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு மிகப்பெரிய நிவாரணம் கிடைக்கும். டிஏ உயர்வு (DA Hike) ஊழியர்களின் மாத வருமானத்தை கணிசமாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

5 /12

செப்டம்பர் 25-ம் தேதி, அதாவது இன்று நடைபெறும் மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் அகவிலைப்படி உயர்வு அறிவிக்கப்படலாம் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜனவரி மாதம் செய்யப்படும் டிஏ உயர்வு கடந்த ஆண்டின் ஜூலை முதல் டிசம்பர் வரையிலான ஏஐசிபிசி குறியீட்டு (AICPI Index) எண்களின் அடிப்படையிலும், ஜூன் மாத அகவிலைப்படி உயர்வு ஜனவரி முதல் ஜூன் வரையிலான குறியீட்டு எண்களின் அடிப்படையிலும் செய்யப்படுகின்றன.

6 /12

2024 ஆம் ஆண்டில், ஜனவரி முதல் ஜூன் வரையிலான ஏஐசிபிஐ குறியீட்டு எண்களில் கணிசமான அதிகரிப்பு ஏற்படுள்ளது. இந்த எண்கள் 1.5 புள்ளிகள் அதிகரித்துள்ளன. இதன் அடிப்படையில் அகவிலைபடி 3%-4% அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

7 /12

அரசாங்கம் அகவிலைப்படியை மூன்று சதவீதம் அதிகரித்தால் மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி மற்றும் ஓய்வூதியதாரர்களின் அகவிலை நிவாரணம் ஆகியவை 53% ஆக உயரும். இதில் 4% ஏற்றம் இருந்தால், மொத்த டிஏ மற்றும் டிஆர் 54% ஆக அதிகரிக்கும்.

8 /12

சம்பள் உயர்வு: அகவிலைப்படி 3% அதிகரித்தால் சம்பளம் எவ்வளவு அதிகரிக்கும் என்பதை ஒர் உதாரணத்தின் மூலம் புரிந்துகொள்ளலாம். ஒரு ஊழியர் மாத சம்பளமாக ரூ. 50,000 பெறுகிறார் என வைத்துக்கொள்வோம். 3% டிஏ அதிகரிப்புக்கு பின்னர் அவரது மாத சம்பளத்தில் தோராயமாக சுமார் ரூ.1,500 அதிகரிப்பு இருக்கும். அதாவது ஆண்டுக்கு சுமார் ரூ.18,000 அதிகரிப்பு இருக்கும். 

9 /12

ஜூலை 2024 -க்கான அகவிலைப்படி உயர்வு குறித்த அறிவிப்பு எப்படியும் நவராத்திரிக்கு முன்னதாக வரும் என எதிர்பார்க்கப்படுகின்றது. அந்த நிலையில், அடுத்த மாத சம்பளத்தில், ஊழியர்கள் ஜூலை மூதலான டிஏ அரியர் தொகையையும் சேர்த்து பெறுவார்கள்.  

10 /12

7வது ஊதியக் குழு: முன்னதாக, ஜனவரி 2024 -இல் மத்திய அரசு ஊழியர்களின் (Central Government Employees) அகவிலைப்படி 4% அதிகரிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து ஊழியர்களின் மொத்த அகவிலைப்படி 50% ஆக அதிகரித்தது. இதற்கான அறிவிப்பு மார்ச் 2024 -இல் வந்தது. 

11 /12

இதற்கிடையில், மத்திய அரசு ஊழியர்கள் 8வது ஊதியக் குழு குறித்த அறிவிப்புக்காகவும் காத்திருக்கிறார்கள். அடுத்த ஊதியக்குழு அமைக்கப்பட்டால், ஃபிட்மெண்ட் ஃபாக்டர் (Fitment Factor) திருத்தப்பட்டு ஊழியர்களின் அடிப்படை ஊதியத்தில் (Basic Salary) மிகப்பெரிய ஏற்றம் காணப்படும். இதன் மூலம் ஊழியர்களின் மொத்த சம்பளத்தின் நல்ல ஏற்றம் இருக்கும்.  

12 /12

பொறுப்பு துறப்பு: இந்த பதிவு தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதன் மூலம் அகவிலைப்படி உயர்வுக்கான எந்தவித உத்தரவாதமும் அளிக்கப்படவில்லை. சமீபத்திய மற்றும் துல்லியமான தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அரசாங்க தளங்களை அணுக பரிந்துரைக்கபப்டுகின்றது.

Next Gallery