அண்ணா சீரியல்: சண்முகம் குடும்பத்தை பிரிக்க சதி.. சௌந்தரபாண்டியின் சூழ்ச்சி!

சண்முகம் குடும்பத்தை பிரிக்க நடக்கும் சதி.. சௌந்தரபாண்டி சூழ்ச்சியால் நடக்கப்போவது என்ன? அண்ணா சீரியல் சனி மற்றும் ஞாயிறு தின எபிசோட் அப்டேட்

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Mar 2, 2024, 04:15 PM IST
  • ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அண்ணா.
  • தங்கைகளும் பரணியும் இசக்கியை ஓடி சென்று நலம் விசாரிக்கின்றனர்.
  • அண்ணா சீரியல் இன்றைய எபிசோட் அப்டேட்.
அண்ணா சீரியல்: சண்முகம் குடும்பத்தை பிரிக்க சதி.. சௌந்தரபாண்டியின் சூழ்ச்சி! title=

Zee Tamil Serial Anna Today's Episode Update: தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அண்ணா. இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் இசக்கி தாலி பிரித்து போட ஏற்பாடு செய்திருக்க பாக்கியத்தின் திட்டம் சௌந்தரபாண்டிக்கு தெரிய வந்த நிலையில் இன்றும் நாளையும் நடக்கப் போவது என்ன என்பது பிடித்து பார்க்கலாம் வாங்க. 

அதிகம் விரும்பி பார்க்கப்படும், ஜீ தமிழ் தொலைக்காட்சியின் அண்ணா சீரியலில், இன்றைய எபிஸோடில், அதாவது சண்முகம் குடும்பத்துடன் கோவிலுக்கு வர இசக்கி பார்த்த கனி ஓடிப்போய் கட்டிப்பிடித்துக் கொள்ள மற்ற தங்கைகளும் பரணியும் இசக்கியை ஓடி சென்று நலம் விசாரிக்க பிரிந்த தங்கைகள் பாசத்தை கொட்டிக் கொள்கின்றனர். 

பிறகு சண்முகம் கோவிலை சுத்தி வரும் நேரத்தில் இசக்கிக்கு தாலி பிரித்து போடும் நிகழ்ச்சி நடந்து முடிகிறது. உடனே இசக்கி ஓடிப்போய் சண்முகம் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்க அவன் ஆசீர்வாதம் செய்யாமல் அங்கிருந்து நகர்ந்து சென்று விடுகிறான். 

பிறகு பரணி அதுக்கு ஒரு காரணம் இருக்கு என்று கவிதாவின் அக்காவும் அக்கா புருஷனும் வந்து சண்முகத்தை சந்தித்து பேசிய விஷயத்தை சொல்கிறார். இதையடுத்து சௌந்தரபாண்டி வீட்டுக்கு வந்ததும் சண்முகம் குடும்பத்தையும் இசக்கியையும் உங்க அம்மாவை சேர்த்து வைத்து விடுவா போல இத நடக்க விடக்கூடாது என முடிவெடுக்கின்றனர். 

உடனே சௌந்தரபாண்டி சண்முகம் உன்னை அடிக்கிற மாதிரி ஏதாச்சு பண்ணு என்று சொல்கிறார். அதன் பிறகு முத்துப்பாண்டி சண்முகத்தை சந்தித்து தப்பு தப்பாக பேச பொறுமையாக இருக்கும் அவள் முத்துப்பாண்டி தன்னுடைய அம்மாவை பற்றி தப்பாக பேசியதும் கொதித்து எழுகிறான். 

சண்முகம் முத்துபாண்டியை தூக்கி போட்டு அடி வெளுத்து கடப்பாறையால் குத்த போக இசக்கி தடுத்து நிறுத்து என்னை கொன்னுட்டு என் புருஷனை கொல்லு என அதிர்ச்சி கொடுக்கிறாள். இதனால் மனமடைந்து வீட்டுக்கு வந்த சண்முகம் இசக்கி இப்படி சொன்னதை வைத்து வருத்தப்படுகிறான். 

இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய அண்ணா சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.

அண்ணா: சீரியலை எங்கு பார்ப்பது?

அண்ணா சீரியல் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது. இது தவிர, டிஜிட்டல் தளமான ZEE5 -லும் இது ஸ்ட்ரீம் செய்யப்படுகின்றது. 

மேலும் படிக்க | Aditi Shankar: அதர்வாவுடன் நடிக்கும் அதிதி ஷங்கர்! இயக்குனர் யார் தெரியுமா?

மேலும் படிக்க | நினைத்தேன் வந்தாய்: தப்பித்த சுடர்... டார்ச்சர் செய்து தவிக்க விடும் குழந்தைகள்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News