அண்ணா சீரியல்: சதி செய்து ஸ்கூலை கைப்பற்றும் சௌந்தரபாண்டி.. காதலை சொன்ன பரணி..!

Zee Tamil Anna Serial Update: சதி செய்து ஸ்கூலை கைப்பற்றும் சௌந்தரபாண்டி.. காதலை சொன்ன பரணி - அண்ணா சீரியல் இன்றைய எபிசோட் அப்டேட் 

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Apr 26, 2024, 01:25 PM IST
  • அண்ணா சீரியல் இன்றைய எபிசோட் அப்டேட்.
  • சதி செய்து ஸ்கூலை கைப்பற்றும் சௌந்தரபாண்டி
  • அண்ணா சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.
அண்ணா சீரியல்: சதி செய்து ஸ்கூலை கைப்பற்றும் சௌந்தரபாண்டி.. காதலை சொன்ன பரணி..! title=

Zee Tamil Anna Serial Update: தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 8.30 மணிக்கு ஒளிப்பரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அண்ணா. இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் ஷண்முகம் தனக்காக வீட்டை அடமானம்  வைத்த விஷயம் பரணிக்கு தெரிய வந்த நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. 

தமிழில் பல தொலைக்காட்சிகள் விதவிதமான கதையம்சங்கள் கொண்ட சீரியல்களை ஒளிப்பரப்பு வருகின்றன. அந்த வகையில், ஜீ தமிழ் தொலைக்காட்சியில்  பிரபலமான சீரியல், அண்ணா (Anna Serial) தொடரில், இன்று (ஏப்ரல். 26) நடக்க போவது என்ன என்பது குறித்து இதில் காணலாம். அதாவது, பரணி சிவபாலனிடம் ஷண்முகம் எனக்காக என்னெல்லாம் செய்திருக்கான் என்று எமோஷனாக பேசி வருகிறாள், எதிரே ஷண்முகம் வர அவனை பளாரென்று அறைய ஷண்முகம் எதுக்கு இப்போ அடிச்ச என்று கேட்க எனக்காக வீட்டை அடமானம் வச்சியா? என்னை உனக்கு இவ்வளவு பிடிக்குமா என்று பேசுகிறாள். 

அடுத்து சௌந்தரபாண்டி ஸ்கூல் ஓனருக்கு போன் போட்டு நானும் சண்முகமும் ஒன்னு தான். நானும் அந்த ஸ்கூலை எடுத்து நடத்தணும்னு நினைக்கிறேன். உங்களுக்கு 5 கோடி கொடுத்துடுறேன் எனக்கே கொடுத்துடுங்க என்று சொல்ல ஓனர் ஸ்கூலை யார் எடுத்து நடத்தினாலும் எனக்கு சந்தோசம் தான், உங்களுக்கே கொடுத்து விடுகிறேன் என்று வாக்கு கொடுக்கிறார். 

போனை வைத்த சௌந்தரபாண்டி ஸ்கூலை வாங்கியதும் அதை இடித்து தள்ளிட்டு பிளாட் போட்டு விற்றால் பெரிய லாபம் வரும் என்று கணக்கு போடுகிறார், இங்கே ஷண்முகம் பணத்துக்கு என்ன செய்வது என்று யோசித்து கொண்டிருக்க கனி தன்னுடைய உண்டியல் பணத்தையும் கொண்டு வந்து கொடுக்கிறாள். தங்கச்சியின் பாசத்தை பார்த்த ஷண்முகம் சிலிர்த்து போகிறான். 

மேலும் படிக்க | ‘கில்லி’யை தொடர்ந்து வெளியாகும் விஜய்யின் இன்னொரு சூப்பர் ஹிட் படம்! எது தெரியுமா?

நைட்டெல்லாம் பரணி தூங்காமல் அழுது கொண்டே இருக்க தூக்கத்தில் இருந்து எழுந்து கொள்ளும் ஷண்முகம் நீ இன்னும் தூங்கலையா என்று கேட்க பரணி அவன் தனக்காக செய்த விஷயங்களை நினைத்து கண்ணீருடன் பேசி தனது மனதுக்குள் இருக்கும் காதலை சொல்கிறாள். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய அண்ணா சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.

மேலும் படிக்க | ஒரு நொடி படம் எப்படி உள்ளது? திரை விமர்சனம்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News