திருச்சிற்றம்பலம் ஆடியோ லாஞ்சிற்கு வீல் சேரில் வந்த நித்யா மேனன்! என்ன ஆனது?

'திருச்சிற்றம்பலம்' படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் நடிகை நித்யா மேனன் வீல் நாற்காலியில் அமர்ந்தபடி கலந்துகொண்டதை பார்த்த அவரது ரசிகர்கள் வேதனை அடைந்துள்ளனர்.  

Written by - RK Spark | Last Updated : Jul 31, 2022, 12:11 PM IST
  • சென்னையில் நடைபெற்றது திருச்சிற்றம்பலம் ஆடியோ லாஞ்சில்.
  • படத்தில் நடித்துள்ள அனைவரும் கலந்து கொண்டனர்.
  • நித்தியா மேனன் வீல் சேரில் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
திருச்சிற்றம்பலம் ஆடியோ லாஞ்சிற்கு வீல் சேரில் வந்த நித்யா மேனன்! என்ன ஆனது? title=

தமிழ், மலையாளம், தெலுங்கு மற்றும் கன்னடம் போன்ற மொழிகளில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை நித்யா மேனன்.  இவர் நடிப்பில் வெளியான 'ஓ காதல் கண்மணி' இன்றுவரை பல ரசிகர்களின் பேவரைட் லிஸ்டில் இடம்பிடித்துள்ளது.  தற்போது திருச்சிற்றம்பலம் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட இவர் வீல் நாற்காலியில் அமர்ந்தபடி பங்கேற்று இருக்கிறார், இது அவரது ரசிகர்களுக்கு வேதனையை அளித்துள்ளது.  மித்ரன் ஜவகர் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள 'திருச்சிற்றம்பலம்' படத்தில் நித்யா மேனன் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து இருக்கிறார்.  இந்த படத்தில் அவருடன் ராக்ஷி கண்ணா, பிரியா பவானி ஷங்கர், பிரகாஷ் ராஜ் மற்றும் பாரதி ராஜா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர்.

மேலும் படிக்க | உங்கள் ரசிகனாக, சினிமா ஆர்வலராக... கமலிற்கு கோரிக்கை வைத்த பிரேமம் இயக்குனர்!

 

சமீபத்தில் இந்த 'திருச்சிற்றம்பலம்' படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவானது சென்னையிலுள்ள ஒரு புகழ்பெற்ற பொறியியல் கல்லூரியில் நடைபெற்றது.  இதில் காலில் ஏற்பட்ட காயத்துடன் நித்யா மேனன் பங்கேற்று கொண்டது அவரது கடமையுணர்ச்சியை வெளிப்படுத்தும் விதமாக அமைந்திருக்கிறது என்று பலரும் பாராட்டி வருகின்றனர்.  இந்த மாத தொடக்கத்தில் அவரது கணுக்காலில் காயம் ஏற்பட்டு இருக்கிறது, இதனை அவர் சமீபத்தில் தனது சமூக வலைதள பக்கத்தின் வாயிலாக ரசிகர்களுக்கு தெரியப்படுத்தி இருந்தார்.  அதில் அவர் 'இப்போது என் கணுக்கால் நன்றாக இருக்கிறது, என் வேலையை நான் இப்போது தொடங்க ஆரம்பித்துவிட்டேன், இப்போது எனது காலால் எனது எடையை தாங்க முடிகிறது.  இப்படி அசையாமல் இருக்கும் நிலை ஏற்பட்டதை நினைத்து நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன், இது சரியான நேரத்தில் தான் நடந்திருக்கிறது, ஏனெனில் கிடப்பில் கிடந்த எனது பணிகள் அனைத்தையும் நான் நிறைவு செய்துவிட்டேன்' என்று கூறியுள்ளார்.

 

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Nithya Menen (@nithyamenen)

கிட்டத்தட்ட 7 வருட கால இடைவெளிக்கு பின்னர் இந்த 'திருச்சிற்றம்பலம்' படம் வாயிலாக தனுஷ் மற்றும் அனிருத் கூட்டணி இணைந்திருக்கிறது, இது ரசிகர்களை உற்சாகமடைய செய்திருக்கிறது.  ஏற்கனவே இப்படத்திலிருந்து நான்கு பாடல்கள் வெளியாகிவிட்டது, அதிலும் குறிப்பாக 'பறக்க பறக்க துடிக்குதே' பாடல் பலருக்கும் விருப்பமானதாக அமைந்திருக்கிறது.  குடும்ப கதையம்சம் நிறைந்த படமாக உருவாகியுள்ள இப்படம் ஆகஸ்ட் 18ம் தேதி வெளியாகுகிறது.

மேலும் படிக்க | மீண்டும் வாடகை தாய் மூலம் குழந்தை பெறப்போகும் பிரியங்கா சோப்ரா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News