பனாமா பேப்பர்ஸ்: அமிதாப், ஐஸ்வர்யாவுக்கு அமலாக்கத்துறை சம்மன்?

Last Updated : Sep 28, 2017, 12:20 PM IST
பனாமா பேப்பர்ஸ்: அமிதாப், ஐஸ்வர்யாவுக்கு அமலாக்கத்துறை சம்மன்? title=

பனாமா பேப்பர்ஸ் ஊழல் வழக்கில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன், ஐஸ்வர்யா ராயுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்ப உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

முக்கிய பிரமுகர்களின் முறைகேடான வெளிநாட்டு முதலீடு மற்றும் சொத்து விவரங்களை பனாமா பேப்பர்ஸ் அம்பலப்படுத்தியது. இந்த ஆவணத்தில் அமிதாப் பச்சன், ஐஸ்வர்யா ராய் ஆகியோரின் பெயர்களும் இருந்தன. 

இந்த வழக்கு தொடர்பாக நடிகர் அஜய் தேவ்க்னை தொடர்பு கொண்டு அமலாக்க இயக்குனரகம் நடவடிக்கை எடுக்கும் என்று சில தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதுதொடர்பாக ஏற்கெனவே விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பி, தற்போது அதற்கான விளக்கம் பெறப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஆனால் அமிதாப் பச்சன் மற்றும் ஐஸ்வர்யா ராய் உள்ளிட்டோரிடம் விசாரணை நடத்துவதற்காக அமலாக்கத்துறை அவர்களுக்கு சம்மன் அனுப்பக் கூடும் என அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.

Trending News