100 கோடி வசூல் செய்த நயன்தாராவின் லேட்டஸ்ட் திரைப்படம்

நயன்தாரா நடிப்பில் லேட்டஸ்டாக வெளியான காட்ஃபாதர் திரைப்படம் 3 நாட்களில் 100 கோடி ரூபாய் வசூலித்துள்ளது.  

Written by - S.Karthikeyan | Last Updated : Oct 9, 2022, 03:19 PM IST
  • நடிகை நயன்தாரா நடித்த காட் ஃபாதர் திரைப்படம்
  • 100 கோடி ரூபாய் வசூலித்து வெற்றிக் கொடி நாட்டியுள்ளது
  • ரசிகர்களுக்கும் படக்குழுவினருக்கும் நன்றி தெரிவித்துள்ளார்
100 கோடி வசூல் செய்த நயன்தாராவின் லேட்டஸ்ட் திரைப்படம் title=

சீரஞ்சீவி நடிப்பில் அண்மையில் வெளியான காட்ஃபாதர் திரைப்படம் ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் அமோக வரவேற்பை பெற்றுள்ளது. ஹீரோயினாக நயன்தாரா நடித்திருக்கும் நிலையில், சல்மான்கான் சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கிறார். இயக்குநர் மோகன்ராஜா படத்தை இயக்கியுள்ளார். ஆர்.பி.சௌத்ரியின் சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனம் படத்தை தயாரித்துள்ளது. தமன் படத்திற்கு இசையமைத்துள்ளார். மலையாளத்தில் பிருத்திவிராஜ் இயக்கத்தில் வெளியான லூசிபர் படத்தின் ரீமேக் தான் இந்த காட்ஃபாதர்.

மேலும் படிக்க | தளபதி 67 அப்டேட் வெளியாகும் தேதி இதுதான்; விக்ரம் பிரபலம் கொடுத்த சரவெடி அப்டேட்

100 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவான இந்தப் படம் ஆந்திரா, தெலங்கான மற்றும் பாலிவுட்டில் வசூல் வேட்டை நடத்தி வருகிறது. உலகம் முழுவதும் 3 நாட்களில் 100 கோடி ரூபாயை வசூலித்துள்ள இந்த திரைப்படம், இந்த வார இறுதியில் 150 கோடியை கடந்து விடும் என எதிர்பார்க்கப்படுகிறது. படத்திற்கு கிடைத்த வரவேற்பை பார்த்து படக்குழு மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளது. சிரஞ்சீவி இதற்காக ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து வீடியோ வெளியிட்டுள்ளார்.

நடிகை நயன்தாராவும் காட்ஃபாதர் படத்திற்கு கிடைத்திருக்கும் வரவேற்புக்காக நன்றி தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், " காட்ஃபாதர் திரைப்படத்தை மாபெரும் வெற்றிப்படமாக மாற்றியதற்காக அனைத்து ரசிகர்களுக்கு எனது நன்றி. நீங்கள் அனைவரும் திரையரங்கில் எங்கள் படத்தை கொண்டாடுவது மகிழ்ச்சி. காட்ஃபாதர் எனக்கு மிகவும் சிறப்பு வாய்ந்த படம். 

மெகாஸ்டார் சிரஞ்சீவியுடன் மீண்டும் ஒருமுறை நடித்தது ஒரு பாக்கியம். அவருடன் படப்பிடிப்பில் இருந்த ஒவ்வொரு நொடியும் என்னை மேம்படுத்தி கொண்டேன். தொடர்ந்து என்னை நம்பி மூன்றாவது முறையாக வாய்ப்பளித்த இயக்குநர் மோகன்ராஜாவுக்கு எனது நன்றி. இந்தப் படத்தில் நான் ஏற்றுள்ள 'சத்யபிரியா' பாத்திரம் மிகவும் சிக்கலான கதாபாத்திரம், என் இயக்குனருக்கு என் மீதுள்ள நம்பிக்கைதான் அதற்கு உயிர் கொடுக்க முடிந்தது. சல்மான்கானை ஏன் பிடிக்கும் என்பதை இந்தப் படம் அனைவருக்கும் காட்டியுள்ளது. பண்டிகை காலத்தில் பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்த அனைவருக்கும் பெரிய நன்றி" எனத் தெரிவித்துள்ளார். 

மேலும் படிக்க | யுவன் சங்கர் ராஜா இசை நிகழ்ச்சியில் நேர்ந்த சோகம்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News