பாவனா கடத்தல் வழக்கு: நடிகர் திலீப்புக்கு ஜாமீன் வழங்க நீதிமன்றம் மறுப்பு

Last Updated : Jul 14, 2017, 12:02 PM IST
பாவனா கடத்தல் வழக்கு: நடிகர் திலீப்புக்கு ஜாமீன் வழங்க நீதிமன்றம் மறுப்பு title=

நடிகை பாவனா கடத்தல் மற்றும் பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்ட நடிகர் திலீப்புக்கு ஜாமீன் வழங்க மீண்டும் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

நடிகை பாவனா கடத்தல் மற்றும் பாலியல் வழக்கில் மலையாள நடிகர் திலீப் போலீஸாரால் கைது செய்யப்பட்ட திலீப் கடந்த 11-ம் தேதி கோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட்டார். அவரை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். அடுத்த நாள் நடிகர் திலீப் தரப்பில் ஜாமின் பெற மனு கொடுக்கப்பட்டது. 

இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், விசாரணை ஆரம்பகட்டத்தில் இருப்பதால், ஜாமின் தர முடியாதென திலீப்பின் மனு நிராகரிக்கப்பட்டது. அதோடு திலீப்பை 2 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க போலீஸாருக்கு கோர்ட் அனுமதி வழங்கியது.

இந்நிலையில், 2 நாட்கள் போலீஸ் காவல் முடிந்தது நடிகர் திலீப் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். ஆனால் திலீப்புக்கு ஜாமீன் மறுத்த நீதிமன்றம், மேலும் ஒரு நாள் போலீஸ் காவலை நீட்டித்து உத்தரவிட்டுள்ளது. 

Trending News