காதலியின் நடத்தையில் சந்தேகம்; முகத்தை அடித்து உடைத்த காதலன்!

தனது காதலியின் நடத்தையில் சந்தேகப்பட்ட காதலன் பெண்ணின் முகத்தை அடையாளம் தெரியாதபடி சிதைத்து கொலை!!

Last Updated : Jul 15, 2019, 01:54 PM IST
காதலியின் நடத்தையில் சந்தேகம்; முகத்தை அடித்து உடைத்த காதலன்! title=

தனது காதலியின் நடத்தையில் சந்தேகப்பட்ட காதலன் பெண்ணின் முகத்தை அடையாளம் தெரியாதபடி சிதைத்து கொலை!!

மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரை சேர்ந்த 19-வது இளம்பெண் குஷி பரிகார். இவர், மாடலிங் செய்து வருகிறார். இவருக்கு அஷ்ரப் சேக் என்ற இளைஞரும் காதலித்து வந்ததாக தெரிகிறது. தொழில் ரீதியாக குஷிக்கு ஆண் நண்பர்கள் சிலர் இருந்துள்ளனர்.

அவர்களுடன் நட்பில் இருப்பது அஷ்ரபுக்கு பிடிக்கவில்லை என்று தெரிகிறது. இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் தனது காரில் காதலி குஷியை அழைத்துக் கொண்டு கடந்த வெள்ளிக்கிழமை பந்துர்னா – நாக்பூர் நெடுஞ்சாலையில் அஷ்ரப் சென்றுள்ளார்.

அப்போது அவர்களிடையே வாக்குவாதம் பூதாகரமாக வெடித்துள்ளது. இதையடுத்து தோழி குஷியை அடித்துக் கொன்ற அஷ்ரப், அவரது முகத்தை அடையாளம் தெரியாதபடி சிதைத்துள்ளார்.

இதுபற்றி தகவல் அறிந்த காவலர்கள் துப்பு துலக்கி விசாரணை நடத்தி சமூக வலைதளங்களின் உதவியால் கொலை செய்யப்பட்ட குஷி பரிகார் என கண்டுபிடித்தனர். கொலை செய்த அஷ்ரபும் கைது செய்யப்பட்டார். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவர் குற்றத்தை ஒப்புக் கொண்டார். ஆண் நண்பர்களுடன் தனது காதலி நெருங்கிப் பழகியதால் அது பிடிக்காமல் கொலை செய்ததாக அஷ்ரப் வாக்கு மூலம் அளித்துள்ளார்.

 

Trending News