சிந்துவுக்கு ஐதராபாத்தில் உற்சாக வரவேற்பு!!

Last Updated : Aug 22, 2016, 02:34 PM IST
சிந்துவுக்கு ஐதராபாத்தில் உற்சாக வரவேற்பு!! title=

ரியோ ஒலிம்பிக் போட்டியில் பாட்மிண்டன் பிரிவில் இந்தியா சார்பில் பங்கேற்ற வெள்ளி பதக்கம் வென்ற பி.வி.சிந்து இன்று ஐதராபாத் திரும்பினார். விமான நிலையத்தில் அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இதற்காக பல்லாயிரகணக்கான ரசிகர்கள் விமான நிலையத்தில் கூடினர். சிந்து வந்ததும், அங்கு கூடியிருந்தவர்கள் உற்சாக கோஷமெழுப்பி சிந்துவை வரவேற்றனர்.

சிந்துவின் தாயார் பிறந்தது ஆந்திரா. சிந்துவின் தந்தை பிறந்தது தெலுங்கானா. ஆகையால் சிந்துவை வரவேற்க ஆந்திரா, தெலுங்கானா இரு அரசுகளும் பிரம்மாண்ட ஏற்பாடுகளை செய்தன. இரு மாநில முக்கிய அமைச்சர்களும் சிந்துவை வரவேற்க விமான நிலையத்திற்கு வந்தனர். ஐதராபாத் நகரம் முழுவதும் சிந்துவை வாழ்த்தியும், வரவேற்றும் பிரம்மாண்ட பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன.

விமானநிலையத்தில் இருந்து கச்சிபவுலி மைதானம் வரை சிந்துவிற்கு பிரம்மாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து அங்கு சிந்துவிற்கு பாராட்டு விராவும் நடத்தப்பட உள்ளது.

சிந்துவை பாராட்டி, பிரபல கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் பிஎம்டபிள்யூ காரை அவருக்கு பரிசாக வழங்க உள்ளார்.

 

 

Trending News