ஜம்மு காஷ்மீர்: லஷ்கர் தளபதியான பஷீர் லக்ஷரி மற்றும் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

Last Updated : Jul 1, 2017, 03:33 PM IST
ஜம்மு காஷ்மீர்: லஷ்கர் தளபதியான பஷீர் லக்ஷரி மற்றும் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை title=

காஷ்மீரின் அனந்தனாக் மாவட்டத்தில் பாதுகாப்பு படையினருக்கு பயங்கரவாதிகளுக்கும் இன்று காலை ஏற்பட்ட துப்பாக்கிச்சண்டையில் லஷ்கர்-இ-தொய்பா இயக்கத்தின் தளபதியான பஷீர் லஷ்காரி மற்றும் இந்த இயக்கத்தை சேர்ந்த மற்ற 2 பயங்கரவாதி சுட்டுக்கொல்லப்பட்டனர்.

காஷ்மீரின் அனந்தனாக் மாவட்டத்தில் உள்ள தாய்ல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன்யடுத்து, அங்கு சென்ற பாதுகாப்பு படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்பொழுது ஒரு வீட்டிற்குள் பதுங்கி இருந்த பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர்.

அதற்கு பதில் தாக்குதல் கொடுத்தனர் பாதுகாப்பு படையினர். இந்த துப்பாக்கிச்சண்டையில் அப்பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் பலியானார் என கூறப்படுகிறது. பல மணி நேரம் நடைபெற்ற இந்த துப்பாக்கிச்சண்டையில், லஷ்கர்-இ-தொய்பா இயக்கத்தின் தளபதியான பஷீர் லஷ்காரி மற்றும் இரண்டு பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக பாதுகாப்பு படை தரப்பில் கூறப்பட்டுள்ளது.

Trending News