உயரமோ 3 அடி.. ஆனால் தன்னம்பிக்கையோ..! அரசியலில் சாதிக்க துடிக்கும் நபரின் பாசிட்டீவ் கதை!

Interesting Story In Tamil: மொராதாபாத் நகராட்சி வார்டு எண். 21-ல் உள்ள ஆதர்ஷ் நகர் பஞ்சாபி காலனியில் பிரவேஷ் சாவ்லா வேட்புமனு தாக்கல் செய்தார். அதன் பிறகு அவர் விவாதத்தின் மையமாகிவிட்டார். காரணம் என்ன? அறிந்துக்கொள்ள முழு செய்தியையும் படிக்கவும். 

Written by - Bhuvaneshwari P S | Edited by - Shiva Murugesan | Last Updated : Apr 18, 2023, 10:56 AM IST
  • உயரம் குள்ளமாக இருக்கலாம், அரசியலில் பல உயரத்தை தொடுவேன் -பர்வேஷ் சாவ்லா
  • உடல் அமைப்பை பலவீனமாக உணர்கிறார்கள். அதையே பலமாக மாற்றி வெற்றி பெறுவேன் -பர்வேஷ்
  • தனது தொகுதியில் உள்ள சவாலான வேட்பாளர்களுக்கே சவால் விடுகிறார் பர்வேஷ் சாவ்லா.
உயரமோ 3 அடி.. ஆனால் தன்னம்பிக்கையோ..! அரசியலில் சாதிக்க துடிக்கும் நபரின் பாசிட்டீவ் கதை! title=

UP Civic Polls 2023: உத்தரபிரதேச மாநிலத்தின் உள்ளாட்சி தேர்தல் நெருங்கி வருகிறது. பாஜக, காங்கிரஸ், சமாஜ்வாதி கட்சி உள்ளிட்டவை தங்கள் வேட்பாளர்களை அறிவித்து வருகிறது. இந்த சூழலில் சுயேட்சை வேட்பாளர் ஒருவர் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறார். அதற்கு காரணம் அவரது உயரம் தான். 3 அடி 8 அங்குலம் இருக்கும் பர்வேஷ் சாவ்லா நிச்சயம் உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்றே தீருவேன் என்ற முனைப்புடன் களத்தில் மாஸ் காட்டுகிறார். அவர் மொராதாபாத் பகுதியில் உள்ள ஆதர்ஷ் நகர் பஞ்சாபி காலனியில் வார்ட் 21-ல் வேட்பாளராக நிற்கிறார். அதற்காக வேட்புமனு தாக்கல் செய்த இவர், தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.

மக்களின் குரலாக செயல்பட தான் அரசியலில் குதித்ததாக சொல்லி சிலிர்க்க வைக்கிறார் பர்வேஷ் சாவ்லா. தனது உயரம் வேண்டுமானால் குள்ளமாக இருக்கலாம், ஆனால் அரசியலில் பல உயரத்தை நான் தொடுவேன் என நம்பிக்கை மிளிர பேசுகிறார்.

மேலும் படிக்க: ஆவியுடன் திருமணம்... ஹனிமூன்..! மஜா பாடகியை திடீரென மிரட்டும் பேய் கணவர்!

மக்கள் உடல் அமைப்பை வைத்து தங்களை பலவீனமாக உணர்கிறார்கள். ஆனால் அதையே பலமாக மாற்றி தேர்தலில் வெற்றி பெறுவேன் என சொல்லி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். இவரைக் கண்டதும் அப்பகுதி மக்கள் உற்சாக வரவேற்பு கொடுத்து, வாழ்த்தி மகிழ்கிறார்கள். அனைவரும் சிரித்த முகத்துடன் இவருடன் பேசுகிறார்கள். போராடி தான் இந்த உலகத்தில் வாழ வேண்டும். அப்படி இல்லை என்றால் உங்களை மிதித்து சென்று விடுவார்கள் என்று மாஸாக பஞ்ச் டயலாக்கும் பேசுகிறார் பர்வேஷ்.

டிகிரி வரை படித்துள்ள இவர். இதுவரை எந்த தேர்தலிலும் நின்றதில்லை. கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக உள்ளாட்சி தேர்தலை கவனத்தில் கொண்டு உழைத்து வருகிறாராம். பெரிய கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள் பலரும் மக்கள் பிரச்சனையை கேட்கக் கூட தயாராக இல்லாத போது, மக்களுக்குகாக களத்தில் நின்று அவர்களுக்கு அனைத்து வசதிகளையும் செய்துத்தருவேன் என சொல்லி தனது தொகுதியில் உள்ள சவாலான வேட்பாளர்களுக்கே சவால் விடுகிறார். இவருக்கு அவரது குடும்பத்தினரும் பக்க பலமாக இருப்பது தான் கூடுதல் சிறப்பு. உள்ளாட்சி தேர்தலில் பர்வேஷ் சாவ்லா வெற்றி பெறுவாரோ இல்லையோ, அவர் தனது தொகுதி மக்களின் மனங்களை வென்றுவிட்டார் என்பது மட்டும் உறுதி.

மேலும் படிக்க: மரணம் குறித்து தெரிந்ததும் மருத்துவர் செய்த செயல்..! கண்கலங்க வைக்கும் கதை!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News