சாம்பார் அண்டாவில் விழுந்து 6 வயது சிறுவன் உயிரிழப்பு..!

ஆந்திராவில் சாம்பார் அண்டாவில் விழுந்து ஆறு வயது சிறுவன் பரிதாபமாக பலி..!

Last Updated : Nov 15, 2019, 11:32 AM IST
சாம்பார் அண்டாவில் விழுந்து 6 வயது சிறுவன் உயிரிழப்பு..! title=

ஆந்திராவில் சாம்பார் அண்டாவில் விழுந்து ஆறு வயது சிறுவன் பரிதாபமாக பலி..!

ஆந்திரா மாநிலம் கர்னூலில் பகுதியில் புதன்கிழமை ஒரு தனியார் பள்ளியில் UKG படித்து வந்த ஆறு வயது சிறுவன், சாம்பார் அண்டாவில் விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

"நொய் பன்யாம் நகரில் உள்ள வித்யா நிகேதன் பள்ளிக்கு ஆறு வயது சிறுவன் ஹோஸ்டலராக அனுப்பப்பட்டார். அன்று மதிய உணவு இடைவேளையின் போது, குழந்தை ஓடிவிளையாடிக் கொண்டிருந்தது. அப்போது, சூடான சாம்பர் கொண்ட அண்டாவில் தவறுதலாக விழுந்தது. இதையடுத்து உடனே, அந்த சிறுவன் கர்னூல் பொது மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டான். இதையடுத்து, மாலை 4.30 மணியளவில் சிறுவன் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது ”என்று பன்யம் சப் இன்ஸ்பெக்டர் ராகேஷ் கூறினார்.

இந்திய தண்டனைச் சட்டத்தின் (IPC) பிரிவு 304 A (அலட்சியம் காரணமாக மரணத்தை ஏற்படுத்துதல்) இன் கீழ் பள்ளி நிர்வாகத்திற்கு எதிராக காவல்துறை வழக்கு பதிவு செய்தது. பள்ளியில் ஒரு பணிப்பெண் விபத்து எவ்வாறு நடந்தது என்பதை விவரித்தார்.

"பணிப்பெண்கள் குழந்தைகளை வரிசையில் மதிய உணவு மண்டபத்திற்கு அழைத்து வந்தனர். இந்த சிறுவன் வரிசையில் இல்லை, அவர் வரிசையில் இருந்து வெளியே ஓடினார். அதே நேரத்தில், சிலர் சூடான சாம்பார் கொண்ட ஒரு பாத்திரத்தை கொண்டு வந்தனர். இந்த சிறுவன் அப்போது வரிசையில் இருந்து விலகிச் சென்றான். பின்னர், சாம்பார் பாத்திரத்தில் கீழே விழுந்தார். சிறுவன் மிகவும் வேகமாக ஓடியதால், உடனடியாக கண் சிமிட்டிய நேரத்தில் அந்த பாத்திரத்தில் விழுந்தான் என அவர் தெரிவித்தார்.  

 

Trending News