இல்லத்தரசிகளுக்கு குட் நியூஸ்; அடுத்த வாரம் சமையல் எண்ணெயின் விலை குறையும்

Edible Oils Price: அடுத்த ஒரு வாரத்தில் சமையல் எண்ணெயின் விலை குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Jul 7, 2022, 07:14 AM IST
  • சர்வதேச அழுத்தத்திற்கு மத்தியில் கச்சா எண்ணெய் விலை கணிசமாக உயர்ந்துள்ளது
  • கடந்த ஓராண்டில் நாட்டில் சமையல் எண்ணெய் விலை கிடுகிடுவென உயர்ந்தது
  • அடுத்த ஒரு வாரத்தில் சமையல் எண்ணெய் விலை குறையும்
இல்லத்தரசிகளுக்கு குட் நியூஸ்; அடுத்த வாரம் சமையல் எண்ணெயின் விலை குறையும் title=

அடுத்த ஒரு வாரத்தில் சமையல் எண்ணெயின் விலை குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது: பணவீக்கத்தால் தத்தளிக்கும் மக்களுக்கு, தற்போது நிவாரணம் அளிக்கும் ஒரு செய்தி வெளியாகியுள்ளது. அதன்படி இன்னும் ஒரு வாரத்தில் சமையல் எண்ணெயின் விலை குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. உலகளவில் ஏராளமான எண்ணெய் இருப்பு மற்றும் உணவு மற்றும் பொது விநியோகத் துறையின் சட்டவிரோத சேமிப்பிற்கு எதிரான பிரச்சாரங்கள் காரணமாக இது எதிர்பார்க்கப்படுகிறது. 

சட்ட விரோதமாக எண்ணெய் சேமிப்பிற்கு எதிராக அரசு தரப்பில் சில காலமாக தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதன் விளைவாக அடுத்த ஒரு வாரத்தில் சமையல் எண்ணெய் விலை லிட்டருக்கு ரூ.10 முதல் 12 வரை குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த ஓராண்டில் நாட்டில் சமையல் எண்ணெய் விலைகள் வேகமாக அதிகரித்துள்ளதால், சாமானியர்களுக்கு இது சிக்கலை ஏற்படுத்தியது. தற்போது உலகளவில் சமையல் எண்ணெய் விலையில் சரிவு ஏற்பட்டுள்ளதால், அடுத்த ஒரு வாரத்தில் இறக்குமதி செய்யப்படும் சமையல் எண்ணெய் விலையை லிட்டருக்கு 10 ரூபாய் வரை குறைக்குமாறு அனைத்து சமையல் எண்ணெய் உற்பத்தி நிறுவனங்களுக்கும் அரசு புதன்கிழமை உத்தரவிட்டுள்ளது. இதுமட்டுமின்றி, நாடு முழுவதும் ஒரே பிராண்டின் எண்ணெய் விலையை ஒரே மாதிரியாக வைத்திருக்கவும் அரசு கேட்டுக் கொண்டுள்ளது.

60 சதவீதத்துக்கும் அதிகமான எண்ணெயை இந்தியா இறக்குமதி செய்கிறது
இந்தியா தனது சமையல் எண்ணெய் தேவையில் 60 சதவீதத்திற்கும் அதிகமாக இறக்குமதி செய்கிறது என்பது அறியப்பட வேண்டியது பொரு தகவலாகும். உலக அழுத்தத்தால் எண்ணெய் விலை கணிசமாக உயர்ந்தது. இருப்பினும், இப்போது இந்த விலைகளில் சில முன்னேற்றம் ஏற்பட்டதுடன் உலகளவில் விலையும் குறைந்துள்ளன. இதற்கிடையில் கடந்த மாதமும், எண்ணெய் தயாரிப்பாளர்கள் எம்ஆர்பி ஐ 10-15 ரூபாய் வரை குறைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையில் தற்போது உலகளாவிய விலையில் மேலும் வீழ்ச்சியைக் கருத்தில் கொண்டு, உணவுத்துறை செயலாளர் சுதன்ஷு பாண்டே அனைத்து சமையல் எண்ணெய் சங்கங்கள் மற்றும் முக்கிய எண்ணெய் உற்பத்தியாளர்களின் கூட்டத்தை கூட்டினார். இக்கூட்டத்தில், தற்போதைய போக்கு குறித்து பேச்சு நடத்தப்பட்டதுடன், உலக எண்ணெய் விலை வீழ்ச்சியின் பலனை சாதாரண நுகர்வோருக்கு வழங்க வேண்டும் என கூறப்பட்டது.

நிறுவனங்கள் விலையைக் குறைப்பதாக உறுதியளித்தன
அடுத்த ஒரு வாரத்தில் சமையல் எண்ணெய் விலை லிட்டருக்கு 10 ரூபாய் வரை குறைக்கப்படும் என்று பெரிய எண்ணெய் உற்பத்தியாளர்கள் உறுதியளித்துள்ளனர். பாமாயில், சோயாபீன் எண்ணெய், சூரியகாந்தி எண்ணெய் போன்ற அனைத்து இறக்குமதி செய்யப்பட்ட சமையல் எண்ணெய்களும் இதில் அடங்கும். இந்த சமையல் எண்ணெய்களின் விலை குறைந்தவுடன், மற்ற சமையல் எண்ணெய்களின் விலையையும் பாதிக்கும் என்றார்.

நாடு முழுவதும் ஒரே விலையில் இருக்கும்
மற்றொரு முக்கியமான விஷயத்தில், நாடு முழுவதும் எண்ணெய் விலையை ஒரே மாதிரியாக வைத்திருக்க அனைத்து சமையல் எண்ணெய் உற்பத்தி நிறுவனங்களுக்கும் உணவுத்துறை செயலாளர் உத்தரவிட்டுள்ளார். தற்போதைய காலகட்டத்தில், வெவ்வேறு பிராந்தியங்களில் ஒரே பிராண்டின் எண்ணெய் விலை லிட்டருக்கு ரூ.3-5 வரை மாறுபடுகிறது. ஆனால் போக்குவரத்து மற்றும் இதர செலவுகள் எம்ஆர்பியில் சேர்க்கப்படுகிறது. இதற்கு நிறுவனங்களும் சம்மதம் தெரிவித்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

இதற்கிடையில் ஜூலை 7ஆம் தேதி புதன்கிழமை நுகர்வோர் விவகார அமைச்சகம் வெளியிட்ட தரவுகளின்படி, 

* பாமாயிலின் சராசரி விலை ஒரு கிலோ ரூ.144.16.
* ராஜ்முகி எண்ணெய் விலை ஒரு கிலோ ரூ.185.77.
* சோயாபீன் எண்ணெய் விலை கிலோ ரூ.185.77,
* கடுகு எண்ணெய் விலை கிலோ ரூ.177.37
* கடலை எண்ணெய் கிலோவுக்கு ரூ.187.93 ஆக உள்ளது.

Trending News