ஊழியர்களுக்கு ஓய்வு பெறும் வயதில் மாற்றம்! என்ன பலன் கிடைக்கும்? அரசு புதிய அப்டேட்

Retirement Age Hike: ஓய்வு பெறும் வயதை உயர்த்த வேண்டும் என மத்திய ஊழியர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். அதற்கான பதிலை தற்போது மத்திய அரசு முன்வைத்துள்ளது. அதன் விவரத்தை தெரிந்துக்கொள்வோம்.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Aug 10, 2023, 11:14 AM IST
  • 122 அரசு அதிகாரிகளுக்கு கட்டாய ஓய்வு அளிக்கப்பட்டது
  • நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயதை மாற்றுவதற்கான பரிந்துரை
  • ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதை மாற்றும் திட்டமில்லை.
ஊழியர்களுக்கு ஓய்வு பெறும் வயதில் மாற்றம்! என்ன பலன் கிடைக்கும்? அரசு புதிய அப்டேட் title=

மத்திய ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதில் மாற்றமா: ஓய்வு பெறும் வயதை உயர்த்த வேண்டும் என்பது மத்திய ஊழியர்களின் நீண்ட நாள் கோரிக்கையாக வைக்கப்பட்டு வருகின்றது. இந்த கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதையும் அவ்வப்போது உயர்த்தி வருகிறது அரசாங்கம். மறுபுறம், மத்திய ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது 60 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதன்படி 60 வயதில், ஓய்வு பெறும் அரசு ஊழியர் ரிடயர்மென்ட்டின் பலனையும் பெறுகிறார்.

இதனிடையே மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்துப்பூர்வமாக பதில் அளித்து மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் முக்கிய தகவல் ஒன்றை தெரிவித்துள்ளார். மத்திய ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதை மாற்றுவது குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு, ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதை மாற்றும் எந்த திட்டமும் தற்போது மத்திய அரசின் பரிசீலனையில் இல்லை என்று தெளிவாக கூறியுள்ளார்.

மேலும் படிக்க | RBI அளித்த நல்ல செய்தி: ரெப்போ விகிதத்தில் மாற்றம் இல்லை.. இஎம்ஐ கட்டுபவர்களுக்கு நிம்மதி!!

122 அரசு அதிகாரிகளுக்கு கட்டாய ஓய்வு அளிக்கப்பட்டது
இத்தகைய சூழ்நிலையில், தற்போது மத்திய ஊழியர்களின் ஓய்வு பெறும் (Retirement Age Update) வயது அதிகரிக்க வாய்ப்பில்லை என்பது தெளிவாக கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் ஓய்வு பெறும் வயதை அதிகரிக்க ஊழியர்கள் இன்னும் சிறிது காலம் காத்திருக்க வேண்டியிருக்கும். இதேபோல், ஒரு கேள்விக்கு எழுத்துப்பூர்வமாக பதிலளித்த மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங், கடந்த 3 ஆண்டுகளில் 122 அரசு அதிகாரிகள் பல்வேறு சேவை விதிகளின் கீழ் கட்டாய ஓய்வு பெற்றுள்ளனர் என்று தெரிவித்தார்.

மேலும் தகவல் அளித்த அவர், பல்வேறு அமைச்சகங்கள் மற்றும் துறைகளின் ஆதார் கட்டுப்பாட்டு ஆணையம் வழங்கிய சொத்து போர்ட்டலில் உள்ள தகவல்களின்படி, கடந்த 2020-23 3 ஆண்டுகளில் மொத்தம் 122 அதிகாரிகள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதையடுத்து இவருக்கு தற்போது கட்டாய ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.

உயர்நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயதை மாற்றுவதற்கான பரிந்துரை
முன்னதாக, உயர் நீதிமன்றம் (Supreme Court) மற்றும் உச்ச நீதிமன்ற (High Court) நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயதை மாற்ற பரிந்துரை செய்யப்பட்டது. அதன்படி உச்சநீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்றத்தின் பதவிக்காலத்தை தற்போதுள்ள ஓய்வு பெறும் வயதைத் தாண்டி நீட்டிக்க செயல்திறன் மதிப்பீட்டு முறையை நாடாளுமன்றக் குழு பரிந்துரைத்துள்ளது. தற்போது உச்ச நீதிமன்ற நீதிபதிகள் 65 வயதிலும், உயர்நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வு வயது 62 ஆகவும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சட்டம் மற்றும் பணியாளர்களுக்கான நிலைக்குழு, நீதித்துறை நடைமுறை மற்றும் அவற்றின் சீர்திருத்தங்கள் குறித்த தனது அறிக்கையை சமர்ப்பித்தது. அதில், பொது நிறுவனங்களில் எஸ்சி மற்றும் உயர் நீதிமன்ற நீதிபதிகளின் பணியை மறுமதிப்பீடு செய்து அவர்களின் பாரபட்சமற்ற தன்மையை உறுதி செய்ய முடியும் என்று கூறப்பட்டது.

வயது தெரிவிக்கவில்லை 
உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயதை அதிகரிக்க பரிந்துரைத்துள்ள நாடாளுமன்ற நிலைக்குழு, அதற்கான வயது வரம்பு எவ்வளவாக இருக்கும் என்பதை தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க | டாடா மோடார்சின் முதல் பெண் எஞ்சினியர்.. அன்று கோவத்தால் கிடைத்தது வேலை, இன்று கோடீஸ்வரி!!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News