பணி நேரத்தில் அடையாள அட்டை கட்டாயம் அணிய வேண்டும்.. இல்லையென்றால் நடவடிக்கை: தமிழக அரசு

தமிழகத்தில் உள்ள அரசு ஊழியர்கள் வேலை செய்யும் நேரத்தில் தங்கள் அடையாள அட்டை கட்டாயம் அணிந்திருக்க வேண்டும் என தமிழக அரசு உத்தரவு.

Written by - Shiva Murugesan | Last Updated : Feb 27, 2020, 11:33 AM IST
பணி நேரத்தில் அடையாள அட்டை கட்டாயம் அணிய வேண்டும்.. இல்லையென்றால் நடவடிக்கை: தமிழக அரசு title=

சென்னை: தமிழகத்தில் உள்ள அரசு ஊழியர்கள் வேலை செய்யும் நேரத்தில் தங்கள் அடையாள அட்டை கட்டாயம் அணிந்திருக்க வேண்டும் என தமிழக அரசு தரப்பில் அறிவிக்கப்பட்டு உள்ளது. வேலை நேரத்தில் அடையாள அட்டையை அணியாத ஊழியர்கள் மீது, அந்தந்த துறைரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என பணியாளர் நலன் மற்றும் சீர்திருத்த துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.

ஏற்கனவே இதுக்குறித்து நிர்வாக பணியாளர் சீர்திருத்தத்துறை நிர்வாகம், பணி நேரத்தில் அரசு ஊழியர்கள் அடையாள அட்டை அணிந்து தான் பணி செய்ய வேண்டும் என்று அரசாணை பிறப்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

உங்களுக்கு சுவாரஸ்யமான சிறப்பு செய்தி, முக்கிய செய்திகள், அரசியல் குறித்து விவரங்களை தெரிந்துக்கொள்ள நமது ZEE HINDUSTAN TV ஐ பாருங்கள். தற்போது ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஒளிப்பரப்பாகிறது.

Tamil Nadu Government

Trending News