ரேஷன் கார்டு தொடர்பான புதிய விதி, அரசு அளித்த மிகப்பெரிய தகவல்

Ration Card Latest News: ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு ஒரு முக்கிய செய்தி. உங்களிடமும் ரேஷன் கார்டு இருந்தால், அரசு விதிகளில் பெரிய மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Mar 28, 2023, 02:49 PM IST
  • 2023 இல் இலவச ரேஷன் கிடைக்கும்.
  • புதிய விதி என்ன.
  • இலவச ரேஷனுக்கு பணம் வசூலிக்கப்படும்.
ரேஷன் கார்டு தொடர்பான புதிய விதி, அரசு அளித்த மிகப்பெரிய தகவல் title=

ரேஷன் கார்டு புதிய விதி: ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு மிகப்பெரிய செய்தி. உங்களிடமும் ரேஷன் கார்டு இருந்தால், அரசு விதிகளில் பெரிய மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த விதிகள் சில நிபந்தனைகளின் கீழ் அரசாங்கத்தால் மாற்றப்படுகின்றன, ஆனால் நீங்கள் விதிகளை புறக்கணித்தால் அது உங்களுக்கு பெரிய சுமையாக ஏற்பட்டுவிடலாம். எனவே ரேஷன் குறித்த அந்த புதிய விதிகள் என்ன என்பதை இப்போது தெரிந்துக்கொள்ளுங்கள்-

2023 இல் இலவச ரேஷன் கிடைக்கும்
கொரோனா காலத்தில், நாட்டு மக்களுக்கு இலவச ரேஷன் வழங்கும் வசதியை அரசாங்கம் தொடங்கியது, அதன் பிறகு நாட்டின் கோடிக்கணக்கான மக்கள் இலவச ரேஷனின் பலனைப் பெற்று வருகின்றனர். மெளக்கும் இந்த ஆண்டு முழுவதும் அதாவது 2023 ஆம் ஆண்டு இறுதி வரை இலவச ரேஷன் வசதியின் பலனை மக்கள் தொடர்ந்து பெறுவார்கள் என்று சமீபத்தில் அரசு அறிவித்து இருந்தது.

மேலும் படிக்க | 7th Pay Commission: டிஏ உயர்வுடன் அரியர் தொகையும் வரும்...மகிழ்ச்சியில் ஊழியர்கள்!!

நேர்மையற்ற மக்கள் பயன்படுத்திக் கொள்கிறார்கள்
இந்த நிலையில் தற்போது இந்த நேரத்தில், பல ரேஷன் கார்டுதாரர்கள் தகுதியில்லாமல், இலவச ரேஷனை பயன்படுத்தி வருவது அரசின் கவனத்திற்கு வந்துள்ளது. அதே நேரத்தில், இத்திட்டத்தின் தகுதியுள்ள பல அட்டைதாரர்கள் அதன் பலனைப் பெறவில்லை. இதுபோன்ற சூழ்நிலையில் தகுதியில்லாதவர்கள் ரேஷன் கார்டுகளை உடனடியாக ஒப்படைக்க அதிகாரிகள் மூலம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் தகுதியில்லாதவர்கள் ரேஷன் கார்டை ஒப்படைக்காவிட்டால், விசாரணைக்கு பின் அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

புதிய விதி என்ன?
புதிய விதியின் படி, ஒருவருக்கு 100 சதுர மீட்டருக்கு மேல் நிலம் இருந்தால், பிளாட் அல்லது வீடு, நான்கு சக்கர வாகனம் அல்லது டிராக்டர், குடும்ப வருமானம் கிராமத்தில் இரண்டு லட்சத்துக்கும், நகரத்தில் மூன்று லட்சத்துக்கும் மேல் இருந்தால் ரேஷன் கார்டை தாலுகா மற்றும் டிஎஸ்ஓ அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும்.

இதனிடையே நீங்கள் ரேஷன் கார்டை ஒப்படைக்கவில்லை என்றால், விசாரணைக்கு பின், ரேஷன் கார்டு ரத்து செய்யப்படும். இத்துடன் குடும்பத்தினர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். அதுமட்டுமின்றி, இலவச ரேஷனுக்கு பணம் வசூலிக்கப்படும்.

மேலும் படிக்க | முதலில் DA உயர்வு..இப்பொது மற்றொரு ஜாக்பாட் செய்தி ஊழியர்களுக்கு

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News